Wednesday, December 26, 2007

தடயம் - அத்தியாயம் - 7

கந்தசாமியையும், குமரேசனையும் பார்த்து சந்தானம், "என்னய்யா! என்ன பெரிசா கண்டு பிடிச்சீங்க? சொல்லுங்க" என்றார்.

அதை கேட்ட கந்தசாமிக்கு முகம் சற்று கறுத்தது.

"என்னைய்யா என்ன கோபமா, ஒரு சின்ன வேலையை செய்துட்டு வரதுக்கு இவ்வளவு பில்டப் பண்றீங்க?"

"அப்படியெல்லாம் இல்லை சார்"

"சரி சொல்லுங்க"

கந்தசாமி பேசத்துவங்கினார்.

"சார், தேவராஜ் பத்தி அக்கம் பக்கத்தில விசாரிச்சதில அவருக்கு கோபக்காரன்னு பேயரே தவிர அவரால யாருக்கும் எந்த தொந்திரவும் அவ்வளவா இல்லை. நேத்திக்குதான் முதல் தடவையா அவருக்கும் பக்கத்தில மாணிக்கம்ன்னு ஒருத்தர் கிட்ட பெரிய வாக்கு வாதத்தில ஆரம்பிச்ச ஒரு சமாச்சாரம் அடிதடில முடிஞ்சிருக்கு. அவரைகூட நம்ம ஸ்டேஷன்ல ரிமாண்டுல வெச்சிருக்கு."

"யோவ், அது எல்லாம் எனக்குத் தெரியும், இதைத்தான் இவ்வளவு நேரம் விசாரிச்சீங்களா? விட்டா தேவராஜ் என்ன வயசு, என்ன கலர் என்ன உயரம் இதெல்லாம்கூட விசாரிச்சீங்களா?"

"செல்வம், என்னய்யா என்ன மாதிரி ஆளுங்களை வெச்சிருக்கீங்க? இதுக்கு இவங்க பண்ண பில்டப்ப பாத்துட்டு நானும் இவங்க நிறைய கண்டு பிடிச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்."

"சார், அவங்க சொல்ல வந்ததை சொல்லி முடிக்கலாமா?"

சந்தானம் அதற்கு, "சொல்லித் தொலைக்கட்டும்" என்றார் வெறுப்பாக.

கந்தசாமிக்கும், குமரேசனுக்கும் அடிபட்ட உணர்வு கண்ணில் ததும்பியது.

கந்தசாமி மீண்டும் சொல்லத்துவகினார்.

"மாணிக்கத்துடன் நடந்த சண்டை ஈவினிங் 8 - 8:30 க்கு நடந்திருக்கு. அப்பரம், ஒரு 10 - 10:30 மணிக்கு 1 ஆட்டோவில 3 ஆளுங்க வந்திருக்காங்க, அவங்க மாணிக்கம் ஆளுங்களா இல்லையான்னு தெரியலை. இங்க வீட்டு வாசல்ல வந்தவங்களுக்கும் தேவராஜுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு. அப்போ தேவராஜ் வீட்டுக்குள்ள கோபமா போயிருக்கார், வந்தவங்களும் அவர் கூடவே உள்ள போயிருக்காங்க. அப்போ மணி ஒரு 11:30 இருக்கும்."

அப்போது சந்தானம் குறுக்கிட்டு. "இருய்யா, எப்படி பக்கத்தில இருந்து பார்த்தமாதிரி டைமெல்லாம் சொல்லிகிட்டு இருக்கே?"

கந்தசாமி சொல்வதற்குள், குமரேசன் குறுக்கிட்டு, "சார், இங்க பக்கத்தில இருக்கிற பல பேருக்கு இன்னிக்கு ஈவினிங் நடந்த சண்டை ஒரு பெரிய விஷயமா இருந்திருக்கு, அவங்க எல்லாம் அங்க அங்க கூடி நின்னு பேசிகிட்டு இருக்கரப்பதான் ஆட்டோவில ஆளுங்க வந்திருக்காங்க"

சந்தானம் சற்று ஆர்வமாகி, "அப்பரம் என்ன ஆச்சு"

கந்தசாமி கண்களால் ஜாடை காட்ட, குமரேசன் தொடர்ந்தார், "ஆட்டோவில வந்தவங்க முதல்ல தேவராஜ்கூட சாதாரணமாகத்தான் பேசிக்கிட்டு இருந்திருக்காங்க, அப்பரம் அவங்கள்ள ஒருத்தன் கொஞ்சம் கோபமா ஏதோ பேசியிருக்கான், அதுல தேவராஜுக்கு கோபம் வந்து அவனை அடிக்க கை ஓங்கியிருக்காரு, அப்போ வந்தவங்க அவரை சமாதானப் படுத்தியிருக்காங்க, அதுல அவருக்கு இன்னும் அதிகமா கோபம் வந்து அவர் அவங்களோட சண்டை போட்டிருக்கார். அக்கம் பக்கத்தில எல்லோரும் பாக்கராங்கன்றது அவருக்கு தெரிஞ்சவுடனே உள்ளே போயிருக்காரு. வந்தவங்களும் அவரோடவே உள்ள போயிருக்காங்க."

செல்வம் உடனே, "வந்தவங்களை அடையாளம் காட்டச்சொன்னா இங்க அக்கம் பக்கத்தில இருக்கரவங்களால முடியுமா?"

"அதை நாங்க கேட்டு அவங்க பேரை குறிச்சு வெச்சிருக்கோம்", என்றார் கந்தசாமி.

சந்தானம் அதற்கு, "வெரி குட், நல்லா யோசிச்சிருக்கீங்க, மேல சொல்லுங்க" என்றார்.

கந்தசாமி தொடர்ந்தார், "உள்ளே போனதும், ஒரு அரை மணி நேரம் எந்த பெரிய சத்தமும் இல்லை, அப்பரம், மொதல்ல தேவராஜோட சண்டை போட்டவன் வெளியில வந்து, டேய் தேவராஜ், இருடா இன்னும் அரை அவுருல நீ என்ன ஆவுர பாருன்னு கத்திட்டு ஆட்டோவை ஓட்டிகிட்டு போயிருக்கான்."

செல்வம், "மத்த ரெண்டு பேரும் என்ன பண்ணினாங்க" என்று கேட்டார்.

அதற்கு கந்தசாமி, "மத்த ரெண்டு பேர்ல ஒருத்தன் வெளியில வந்து, ஏய் உன்னால முடிஞ்சத நீ பாத்துகடாங்கர மாதிரி ஏதோ சொல்லிட்டு உள்ள போயிட்டதா அக்கம் பக்கத்துல இருக்கரவங்க சொல்றாங்க"

"அதுக்கு மேல என்ன நடந்தது"

"ஒரு மணி நேரத்துக்கு பிறகு 2-3 ஆட்டோல 10-12 பேர் வந்திருக்காங்க, வந்து கதவை தட்டி தேவராஜ கத்தி கூப்பிட்டிருக்காங்க, அவர் கூட இருந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் வந்து கதவை திறந்து, என்னய்யா என்ன பெரிசா கொரலு விடரீங்கன்னு கத்தியிருக்கான். அவனை தள்ளிகிட்டு முதல்ல ஒரு நாலு - அஞ்சு பேரு வீட்டு உள்ள போயிருக்காங்க, அப்பரம் ரொம்ப சத்தமா சண்டை போட்டிருக்காங்க, யாரோ அடி வாங்கரமாதிரி கத்தியிருக்காங்க"

அப்போது சந்தானம், "ஏன்யா, இவ்வளவு நடந்திருக்கு, இங்க அக்கம் பக்கத்தில இருந்த ஒருத்தர்கூட போலிஸை கூப்பிடலயா, என்ன கிண்டல் பண்றாங்களா?" என்றார்.

அதற்கு கந்தசாமி, "சார் அவங்க கிண்டல் பண்ணல, அவங்க போலீஸ் கம்ளைய்ண்ட் கொடுக்காததற்கு காரணம் என்னன்னா...." என்று அவர் சொன்ன காரணத்தை கேட்டு செல்வமும், சந்தானமும் திடுக்கிட்டனர்.

(தொடரும்)

தடயம் - அத்தியாயம் - 6

"என்ன செல்வம், என்ன விஷயம்"

"வெளியில என்கொயரி பண்ணிகிட்டிருக்கர நம்ம ஆளுங்கள வந்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லிட்டு இருக்கேன், அருள் மொழி வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு போயிருக்கார், உங்கள கால் பண்ண சொல்லிட்டு போயிட்டார், துரை உங்கள உடனே கால் பண்ணச் சொன்னார். உங்களுக்கு என்ன சார் ப்ரச்சனை?"

"உங்க கிட்ட எனக்கு ப்ரச்சனைன்னு எப்ப சொன்னேன்" என்று சீறினார்.

"இல்லை அவசரமா போன் போன் பேச வெளியில போனீங்களேன்னு கேட்டேன், சாரி சார்"

"இட்ஸ் ஓகே."

"அருள் மொழிகிட்ட பேசிடறேன்"

"அப்ப துரை சார்?"

"அவரு எங்க போயிடப்போறாரு, நீங்க மெசேஜ் சொல்லிடீங்கல்ல, இனி நான் பாத்துக்கறேன்."

"ஹலோ, அருள், நான் சந்தானம் பேசறேன், என்ன மேட்டர்,.."

"..."

"இல்லை இங்க நானும் செல்வமும்தான் இருக்கோம்"

"..."

"அப்படியா!"

"..."

"நீங்க எங்க இருக்கீங்க? வீட்லயா?"

"..."

"ஹெல்ப்புக்கு யாரையாவது அனுப்பட்டுமா? செல்வத்தை அனுப்பட்டுமா?"

"..."

"டோண்ட் வொர்ரி, நான் வரட்டுமா?"

"..."

"ஓகே, வீட்டுக்கு போய் நிலவரம் தெரிஞ்சதும் எனக்கு போன் பண்ணுங்க"

"என்ன சார் என்ன ப்ரச்சனை?"

"செல்வம், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியனும்னா, நானே சொல்றேன், இப்போதைக்கு ப்ரச்சனை ஒன்னும் இல்லை. அருளோட அஸிஸ்டெண்ட்ஸ் என்ன கண்டுபிடிச்சாங்கன்னு விசாரிங்க, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிங்க, அத விட்டுட்டு தேவையில்லாம எங்கிட்ட கேள்வி கேக்கரதெல்லாம் வேண்டாம்"

"ஹலோ, துரை, நான் சந்தானம் பேசறேன், கால் பண்ணியிருந்தீங்களாம், என்ன விஷயம்"

"நான் கால் பண்ணல, செல்வம்தான் பண்ணினார். ஆமா, என்ன கண்டு பிடிச்சீங்க, செல்வமும், அவர் ஸ்டேஷன் ஆளுங்களும், நல்லா கோ-ஆப்பரேட் பண்றாங்களா?"

"ஷூர், நல்லா கோ-ஆப்பரேட் பண்றாங்க, இங்க நடந்திருக்கரது ஒரு ப்ளாண்டு ஆப்பரேஷன், அருளை பர்சனலா வரச்சொல்லி தடயங்கள எடுக்க சொல்லியிருக்கேன். கூடிய சீக்கிரம் அவங்கள நெருங்கிடுவோம். நான் அப்பரம் கால் பண்றேன்."

"செல்வம், துரைக்கு எதுக்கு போன் பண்ணினீங்க, நான் அப்பவே சொன்னேன் நாம ரெண்டு பேரும் ஒன்னா இந்த கேஸ்ல ஒர்க் பண்ணப் போறோம்னு அப்பரம் எதுக்கு என்னை கேக்காம அவருக்கு போன் பண்ணினீங்க?"

"சார், நாம ரெண்டு பேரும் ஒன்னா ஒர்க் பண்ணலாம், ஆனா துரை என்னுடைய மேலதிகாரி, அவருக்கு நான் இங்க நடக்கரது பற்றி அடிக்கடி ரிப்போர்ட் தரனும்கரது அவருடைய ஆர்டர், அதை நான் மீற முடியாது. So இனி என்ன பண்றதுங்கரதை பத்தி யோசிப்போம்."

வாசலில் பாலன் தயங்கிய படி இருந்தார், சந்தானம் அவரை பார்த்து, "யாருயா? என்ன வேணும், சீனியர் ஆபிசர்ஸ் பேசிகிட்டு இருக்கோம், கதவைத் தட்டிட்டு உள்ள வரனும்னு தெரியாது?"

"சாரி சார், என் பேர் பாலன், செல்வம் சார் ஸ்டேஷன்ல ஏட்டா வேலை செய்யறேன். வேளியில விசாரிக்க அனுப்பின கான்ஸ்டபிள்ஸ வரச் சொன்னாரு அவங்க வந்திட்டாங்க, உள்ள வரச் சொல்லாமான்னு கேக்க வந்தேன்."

"கொஞ்சம் வெளியில இருங்க நான் வந்து பாக்கரேன்" என்ற சந்தானம், "செல்வம், என்ன நடக்குது இங்க, எதுக்கு இப்ப அவங்கள என்கொயரிய முடிச்சுட்டு வரச்சொன்னீங்க? தேவராஜ் என்ன ஆனான்னு தெரியக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?"

"சார், துரை சார்தான் இன்னும் ரெண்டு மணி நேரத்தில ஒரு ரிப்போர்ட் கேட்டாரு அதனால இவங்க என்ன கண்டு பிடிச்சாங்கங்கரத தெரிஞ்சுகிட்டா நல்லதுன்னு அவங்கள வரச்சொன்னேன்."

சந்தானம், பாலனைப் பார்த்து, "யோவ் அவங்கள உள்ள வரச்சொல்லு"


உள்ளே வந்த கந்தசாமியையும், குமரேசனையும் பார்த்து சந்தானம், "என்னய்யா! என்ன பெரிசா கண்டு பிடிச்சீங்க? சொல்லுங்க" என்றார்.
அதை கேட்ட கந்தசாமிக்கு முகம் சற்று கறுத்தது.
(தொடரும்)

தடயம் - அத்தியாயம் - 5

.... அப்போது அருள்மொழியின் செல்போன் ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசத் துவங்கிய அவருடைய முகம் சற்று பேயடித்தது போல் ஆனது. இது செல்வத்தின் கண்களில் இருந்து தப்ப வில்லை.

"நிஜமாவா சொல்றே"

"ஆமாங்க"

"நீ கவலைப் படாதே, நான் எவ்வளவு சீக்கிரம் அங்க வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்க வரேன். போனை அவங்க கிட்ட குடு"

"இத பாருங்க உங்களுக்கு எது வேணும்னாலும் என்னை கேளுங்க, என் வைஃப்க்கு எதுவும் தெரியாது, அவளை தொந்தரவு செய்யாதீங்க"

"...."

"நான் அங்க வர்ரதுக்கு எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்"


"..."

"ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் தயவு பண்ணி கேளுங்க, நான் அங்க வந்த பிறகு அதைப் பத்தி முடிவு பண்ணலாம்"

"..."

"சரி நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள அங்க வரேன்" என்றபடி செல்போனை கட் செய்தார்.

"என்ன அருள் மொழி சார், என்ன ப்ரச்சனை"

திடுக்கிட்டு போய், "ஒன்னும் இல்லை செல்வம், வீட்ல ஒரு சின்ன ப்ராப்ளம், வைஃப் தனியா இருக்காங்க அதனால அவங்களுக்கு என் உதவி தேவைப் படுது, நான் கொஞ்சம் வீட்டுக்கு போய்ட்டு வரேன்"

"அப்ப இதையெல்லாம் யார் பாத்துப்பாங்க?"

"அதுக்கு நான் என் அசிஸ்டெண்ட் ஒருத்தரை விட்டுட்டு போறேன், அவருக்கு ஏதாவது உதவி தேவைன்னா எனக்கு போன் பண்ணச்சொல்றேன். சந்தானம் எங்க?"

"அவர் தோட்டத்துல ஒரு பர்சனல் கால் அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கார், இப்ப வந்திடுவார்"

"அவர் கிட்ட நான் அவசரமா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிடுங்க, அவரை எனக்கு கால் பண்ண சொல்லுங்க"

"சரி"
அவர் கிளம்பியதைப் பார்த்த உடன் செல்வம் தன் கைத் தொலைபேசியை எடுத்து மேலதிகாரி துரைசாமியை அழைத்து பேசத் துவங்கினார்.

"என்ன செல்வம் அங்க எல்லாம் ஸ்மூத்தா போகுதா?"

"எஸ் சார்"

"உங்க இஷ்டத்துக்கு எதுவும் பண்ணிடாதீங்க, எங்கிட்ட கேட்டுட்டு செய்யுங்க, ஆமா, யாரைகேட்டு அருள்மொழியை direct ஆ கூப்பிட்டீங்க?"

"சந்தானம் சார், ஆர்டர் பண்றமாதிரிதான் செய்றோம் சார். அவர்தான் அருள்மொழியை வர வழைச்சார், அது என் ப்ளான் இல்லை சார்"

"சந்தானத்து கிட்ட போனை குடுங்க"

"சார் அவர் பர்சனல் கால் அட்டெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்"

"சரி அருள்கிட்ட போனை கொடுங்க"

"சார் அவர் அவசர வேலைன்னு சொல்லிட்டு இப்பதான் வீட்டுக்கு போனார், அவர் வந்ததும் உங்களுக்கு போன் பேசச் சொல்றேன்."

"யோவ் என்னய்யா நடக்குது அங்க, ஒரு கொலை நடந்திருக்குது, ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டு வந்த கமிஷ்னர் அரட்டை அடிச்சுகிட்டு இருக்கார், தடவியல் நிபுணர் வீட்டுக்கு போயிட்டார், ஆக ரெண்டு பேரும் ஸ்பாட்ல இல்ல, அப்படித்தானே"

"சார் நான் இருக்கேன், அருள்மொழியோட அஸிஸ்டெண்ட்ஸ் 2 பேர் இருக்காங்க, கான்ஸ்டபிள்ஸ் அக்கம் பக்கத்தில விசாரிச்சுகிட்டு இருக்காங்க"

"செல்வம், இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்திலல எனக்கு full report தயார் பண்ணி என் டேபிள்ல இருக்கனும். சந்தானம் ஃப்ரீயானதும் எனக்கு கால் பண்ணச் சொல்லுங்க"

"ஓகே சார்" என்றபடி இணைப்பைத் துண்டித்தார்.

செல்வம் வாசலுக்கு வந்து கான்ஸ்டபிளிடம், "பாலன், வெளியில விசாரிச்சுட்டு இருக்கர நம்ம ஆளுங்கள இன்னும் ஒரு 20 அல்லது 30 நிமிஷம் கழிச்சு இங்க வரச்சொல்லுங்க, எனக்கு அவங்க என்ன கண்டு பிடிச்சிருக்காங்கன்னு தெரியனும்"

"சரி சார், நான் இப்பவே போய் சொல்லிடரேன், வெளியில காவலுக்கு 2 கான்ஸ்டபிள்ஸ்தான் இருக்காங்க போதுமா, இல்லை B3 ல இருந்து ஆளுங்கல வரவழைக்கவா?"

"இருங்கரவங்க போதும், தேவைப்பட்டா சொல்லிக்கலாம்"


"சார், சந்தானம் சார் வர்ராரரு"

"என்ன செல்வம், என்ன விஷயம்"

"வெளியில என்கொயரி பண்ணிகிட்டிருக்கர நம்ம ஆளுங்கள வந்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லிட்டு இருக்கேன், அருள் மொழி வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு போயிருக்கார், உங்கள கால் பண்ண சொல்லிட்டு போயிட்டார், துரை உங்கள உடனே கால் பண்ணச் சொன்னார். உங்களுக்கு என்ன சார் ப்ரச்சனை?"

"உங்க கிட்ட எனக்கு ப்ரச்சனைன்னு எப்ப சொன்னேன்" என்று சீறினார்.

(தொடரும்)

Saturday, September 01, 2007

ஆன்மீகச் சொற்பொழிவுகள்

ராதே க்ருஷ்ணா

கலிபோர்னியாவிலிருந்து இயங்கும் Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) என்ற தொண்டு நிறுவனமும், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பக்தர்களால் நடத்தப் பட்டு வரும் மதுரமுரளி-சைதன்ய மஹா ப்ரபு நாம பிக்க்ஷா கேந்ரா (http://www.madhuramurali.org/) (http://www.namadwaar.org/) என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து இரு ஆன்மீகப் பேச்சாளர்களைக் கொண்டு அமெரிக்காவின் பல பகுதிகளில் சொற்பொழிவுகளை நடத்த உள்ளனர். சொற்பொழிவுகள், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெற உள்ளது. இவர்கள் பற்றிய மற்ற விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.





இவர்கள் செப்டம்பர் 12ம் தேதிமுதல் 23-ம் தேதிவரை நமது ரிச்மண்டில் தங்கியிருந்து சொற்பொழிவுகள் நிகழ்த்த உள்ளார்கள். அது பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் விவரம் வேண்டுவோர் மாலதி முரளியை (804) 747-7997 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது malamurali@yahoo.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது http://godivinity.org/ என்ற வலைதளத்திலிருந்து தெரிந்து கொள்ளவும்.


Radhe Krishna

Non profit organization Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) of California, joins hands with a non profit organization madhuramurali - Chaithanya Maha Prabhu Naama Bhiksha Kendra of Chennai (http://www.madhuramurali.org/) (www.namadwaar.org) run by the followers of Sri Sri Muralidhara Swamiji in bringing two spiritual speakers in giving Discourses at various places in USA. The Discourses will be in Tamil, English and Hindi. To learn more about the speakers and the mission, please refer to the attached flyers.

The speakers will be staying in Richmond from 12th September to 23rd September giving discourses on various topics. The Schedules are detailed below. If you require further details on the satsang schedules, please contact Malathi Murali @ (804) 747-7997 or send an email to malamurali@yahoo.com or visit http://godivinity.org/.


Bhakthi Margam and Power of Nama in English by Sri Ramanujam

On Tuesday, 9/18/07 7:00 pm – 8:00 pm @ Twin Hickory Area Library, 5001 Twin Hickory Road, Glen Allen, VA 23059 [Directions]

Bhaktha Vijayam in Tamil by Kumari Poornima

On Wednesday, 9/19/07 7:00 pm – 8:30 pm @ Residence of Malathi Murali, 5517, Holman Dr, Glen Allen, VA 23059 [Directions]

Guru Bhakthi in Tamil by Kumari Poornima
Thursday, 9/20/07 - 7:00 pm - 8:00 pm @ Twin Hickory Area Library, 5001 Twin Hickory Road, Glen Allen, VA 23059 [Directions]

Bhajan & Satsang by Kumari Poornima
On Friday, 9/21/07 - 7:00 pm - 8:30 pm @ Residence of Malathi Murali, 5517, Holman Dr, Glen Allen, VA 23059 [Directions]

Beyond Meditation – Self Discovery in English by Kumari Poornima
On Saturday, 9/22/07 - 3:00 pm – 5:00pm @ Twin Hickory Area Library, 5001 Twin Hickory Road, Glen Allen, VA 23059 [Directions]

Unshackling the mind for everlasting peace in English by Kumari Poornima
On Sunday, 9/23/07 - 4:00 pm – 6.00 pm @ Hindu Center of Virginia, 6051 Springfield Road, Glen Allen, VA 23060. [Directions]

Sita Kalyanam by Kumari Poornima
On Monday, 9/24/07 - 7.00 pm – 8.30 pm @ Residence of Malathi Murali, 5517, Holman Dr, Glen Allen, VA 23059 [Directions]

ராதே க்ருஷ்ணா

Thursday, May 17, 2007

சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும்.

தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா
என்று இருங்கள். அதுவும் முடியாதவர்கள் கீழ்கண்ட சில விதிகளை பின் பற்றினால் சன் டிவியின் சகிக்காத தொடர்களை ரசிப்பதோடு, வாழ்வில் அல்சர், இரத்த கொதிப்பு போன்ற வியாதி இனி வாராது அந்த சூரிய பகவான் அருள் புரிவார்.

முக்கிய விதி:
எல்லா தொடரிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும், கீ கொடுத்தால் ஓடும் கை கடிகாரத்திற்கு எவ்வளவு மூளை உண்டோ, அவ்வளவு மூளைதான் அவர்களுக்கும்.
இனி உப விதிகள்:

1. எந்த தொடரும் இப்போது முடியும் என எப்போதும் சொல்ல முடியாது, எனவே, தொடர் இப்படி முடியுமா, அப்படி முடியுமா என மண்டை குழம்புவது ஒரு கால விரயம்.
2. எல்லா தொடரிலும் ஒரு வில்லன் (அ) வில்லி உண்டு, அவர்கள் கொஞ்சம் கோணல் சிரிப்பு சிரித்தபடி கடித்து கடித்து வசனம் பேசுவார்கள், சீனுக்கு சீன் உதார் விடுவார்கள்.
3. எல்லா தொடரிலும் ஒரு ஏழை அப்பா (அ) அம்மா நிச்சயம் உண்டு, அவர்கள் எப்போதும் அழுதபடியே இருப்பார்கள்.
4. எல்லா தொடரிலும் நன்கு படித்த, பணக்கார பெண்ணும், வாசக்கதவை மூடி, டெலிஃபோனை பிடுங்கி விட்டால், வெளியே போகத்தெரியாமல் பூனை மாதிரி வீட்டிலேயே இருப்பாள்.
5. எல்லா தொடரிலும், யாராவது ஒருவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கும்.
6. எல்லா கதாநாயகனுக்கும் ஒரு கெட்ட Flashback கட்டாயம் இருக்கும்.
7. எல்லா தொடரிலும் ஒன்று (அ) இரண்டு கதாபாத்திரங்கள் ரொம்ப நல்லவர்கள், ஆனால் எப்போதாவதுதான் வருவார்கள்.
8. ஒரு தொடரில் வரும் நடிகர், நடிகைகள் எல்லா தொடர்களிலும் வருவார்கள், so, ஒரே தொடரை தொடர்ந்து பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒன்று என்று பார்த்தாலும் புரியும்.
9. எல்லா மாயாஜால தொடர்களிலும், சமீபத்திய எல்லா ஆங்கிலப்பட ட்ரிக் கண்டிப்பாக இருக்கும்.
10. அம்மன், முருகன் தொடர்களை பார்ப்பதை தவிர்க்கவும், பார்த்தால், கொஞ்சம் இருக்கும் கடவுள் பக்தியும் போய், நாஸ்திகராவது சர்வ நிச்சயம்.
11. நியூஸ் - நடு நடுவே வரும் கேள்வி - பதில் மட்டும் OK, so, mute செய்து விடுவது உத்தமம்.
12. Pepsi - தொடரை ரசிக்க, பாடல்காட்சி வரும் வரை mute செய்து விடுவது ரொம்ப நல்லது, செய்தால், கேட்கப்படும் அபத்த கேள்விகளை கேட்டு எதையாவது எடுத்து டிவி மேல் வீசலாம் என்ற கோபம் வராது தவிர்க்கலாம், டிவி ரிப்பேர் செலவும் மிச்சம் பிடிக்கலாம்.
13. அரட்டை அரங்கம் - தவிர்ப்பது நல்லது, கொஞ்சம் இருக்கும், மூளையும் மழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது, இந்தியா பற்றி நமக்கு இருக்கும் பொது அறிவு பெரிய கேள்விக்குறியாகிவிடும். மேலும், பார்த்த பின் ஒரு வாரம் வரை - காதில் 'ஒய்ங்க்' என்று ஒரே இரைச்சலாக இருக்கும். எதற்காக எல்லோரும் கத்தி கத்தி பேசுகிறார்கள்?
14. உங்களோடு உங்கள் குழந்தைகளும் தொடர்களை பார்க்கின்றார்களா, தினமும் பார்க்கின்ற ஒவ்வொரு தொடருக்கும், $1.00 வீதம் உண்டியலில் போட்டு வந்தால், பிற்காலத்தில் அவர்கள் பிழைக்க ஒரு பொட்டிக்கடை வைக்க பணம் தயார்.

-முரளி

Monday, May 14, 2007

நிதர்சனம்

காலையில் எழுந்திருந்து மணி பார்க்கும் போது தூக்கி வாரிப் போட்டது. மணி 7.30. எப்படி அலாரம் அடித்தது தெரியாமல் தூங்கினோம்!.

இது ரொம்ப சகஜம் என்றால், உங்களுக்கு கிரி என்னும் வேதகிரியாகிய என்னைத் தெரியாது.

காலை 5.30 மணிக்கு எழுந்து 6.30 வரை தியானம், யோகா செய்து ஒரு வெதுவெதுப்பான குளியல், 7 லிருந்து - 7.30 வரை பூஜை, காலை சிற்றுண்டி முடித்து, 8 மணிக்கு ஷ¤ போட்டு 'Car Pooling' காருக்காக வாசலில் ஐந்தே ஐந்து நிமிடம் காத்திருப்பு, 6 வது நிமிடம் என் கார் காரஜிலிருந்து கிளம்பி விடும்.

இன்னும் என்னைப் பற்றி சொல்லிக் கொண்டே போனால், இந்த சிறு கதை ஒரு மெகா சீரியல் ஆகிவிடும் வாய்ப்பிருப்பதால், இதை இத்துடன் நிறுத்தி விட்டு கதைக்கு மீண்டும் வருகிறேன்.

"என்ன ஆச்சு இன்னிக்கு? எப்படி அத்தனை நாழி தூங்கினோம்?. இந்த கோமளம் வேற எழுப்பாம விட்டுட்டா!"

"வாசலில் இருந்து இன்னும் நியூஸ் பேப்பர்-கூட எடுக்கல!"

"லீவுக்கு காலேஜிலேர்ந்து வந்த பரத்தும், தீபாவும் எங்க போனாங்க! வீடே வேறிச்சோடி கிடக்கு!" -னு யோசிச்சுண்டே கிளம்ப ஆரம்பிச்சேன்.

மணி 7.30 ஆயுடுத்தேன்னு, தியானம், யோகா எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணி, குளிக்கப் போனேன். பாத் டப்-ல குழாய் எதையும் திறக்கவே முடியலை. ஒரு வழியா குளியல முடிச்சேன்.

மாடில இருந்து, கீழ இறங்கி ஹாலுக்குப் போற வழில கிச்சன் சிங்க்-ல ராத்திரி சாப்பிட்டுட்டு போட்ட தட்டும் மற்ற பாத்திரங்கள் இருந்ததை பார்க்க ஆச்சர்யமா இருந்தது. கோமளம் அந்த விஷயத்தில் ரொம்ப கறார், எவ்வளவு நேரமானாலும், ராத்திரி கிச்சனை ஒழிக்காம வந்து படுத்துக்கவே மாட்டாள். அவளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா! ஒரு வேளை ஏதாவது ஹாஸ்பிடல் போறதா சீட்டு எழுதி வெச்சுட்டு போய் இருக்காளானு பார்த்தேன், அதுவும் காணம்னதும், என்ன ஆச்சுனு கொஞ்ச நாழி குழம்பி போய் யோசிச்சிண்டு இருந்தேன்.

அப்போ, ஹால்ல நேத்து ராத்திரி, சாப்பிட்டுட்டு ரொம்ப நாள் கழிச்சு எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஜாலியா அரட்டை அடிச்சுண்டு இருந்தது ஞாபகம் வந்தது. பரத்-க்கு வர Semester-ஓட படிப்பு முடிஞ்சுடுது. அவனுக்கு கேம்பஸ் இன்டர்வ்யூ-ல வேலை கிடைச்சிடுச்சு, தீபா-க்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு பாக்கி இருக்கு. அந்த ஆண்டவன் க்ருபைல ரெண்டு பேரும் படிப்புல மகா சுட்டி. எனக்கு ஒரு செலவும் இல்லாமல் ஸ்காலர்ஷிப்-ல படிக்கராங்க. நேத்து ராத்திரி, பரத் வேற, என்னை மாதிரி, என் அப்பா மாதிரி, ஆக்ட் பண்ணி பேசினதை பார்த்து, கண்ல ஜலம் வர மாதிரி சிரிச்சது ஞாபகத்துக்கு வந்தது.

"ஆமா அந்த அரட்டையில் எப்போ மாடிக்குப் போனோம், எப்ப தூங்கினோம்கறதே மறந்து போச்சே!".


அப்போ கடிகாரம் மணி அடிச்சதும்தான் 8 ஆச்சுன்னு ஞாபகம் வந்தது. கட கட னு கிளம்பி வாசலுக்கு வரவும், என் ஆபிஸ்ல என் பக்கத்து ஸீட் ஜெஃப் கார் கொண்டு வரவும் சரியா இருந்தது.

நான் கார் கிட்ட வரவும், ஜெஃப் கார் கதவை திறந்து கீழே இறங்கினான். நான் "Hi Jeff Good Morning" னு சொன்னதுக்கு பதிலே சொல்லாமல், கொஞ்ச நேரம் என்னையே வெறிச்சுப் பார்த்தான், அப்புறம், என் பக்கத்து வீட்டு சார்லஸ் கிட்ட போய் ஏதோ பேசிட்டு வந்தான். சரி வண்டில போகும் போது பேசிக்கலாம்னு நானும் விட்டுட்டேன்.

வண்டி எங்க தெரு கடக்கும் போது எதுத்தாப்ல பரத் என் காரை ஓட்டிண்டு வந்ததை பார்த்தேன். பின் ஸீட்-ல தீபா கோமளத்தைத் தாங்கி பிடிச்சுண்டு இருந்தாள். முன் ஸீட்-ல சார்லஸ்-ன் பையன் டோனி இருந்தான். அப்பாடா, ஒன்னும் ப்ரச்சனை இல்ல, எல்லாம் நார்மல்-னு மனசு லேசாயிடுச்சு. பீஸ் போனதும் வீட்டுக்கு போன் பண்ணி என்ன ஆச்சுனு விசாரிச்சுக்கலாம்னு நினைச்சுண்டேன்.

ஒருவழியா ஆபீஸுக்கு வந்தோம், அப்போ, தினமும் எனக்கு வணக்கம் சொல்ற ரிசப்ஸனிஸ்ட் நான் வணக்கம் சொல்லியும் எனக்கு திரும்ப வணக்கம் சொல்லவே இல்லை.

அப்போ எங்க டிவிஷன் டைரக்டர் எட்வர்ட் வந்து "எல்லோரும் கொஞ்சம் மெயின் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வாங்க ஒரு முக்கியமான செய்தி சொல்லனும்”-னு உரக்க சொன்னார்.

"ஓருவேளை, போன வாரம், ஒரு பெரிய ப்ராஜெக்ட்-அ ராப்பகலா நானும், என் டீம்ல இருக்கற 10 பேரும் சேர்ந்து முடிச்சு கொடுத்ததுக்கு, இப்ப பாராட்றங்களா! " இல்லைனா ஆபீஸ்ல எல்லோரும் பயந்துண்டு இருந்த மாதிரி, Layoff - னு யோசிச்சுண்டே நான் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வந்ததை எல்லோரும் பார்த்து இருக்கணும், ஆனா யாரும் என்னைப் பார்த்து ஒரு வணக்கம் கூட சொல்லலை. சரிதான், நம்பள Layoff பண்ணிட்டாங்க, இந்த வீட்டு லோன் என்ன ஆகும், பசங்க படிப்பு எல்லாம் எப்படி சமாளிக்கப் போறோம் -னு யோசிச்சிண்டு இருந்த போது, "அட என்ன இப்படி பைத்தியக்காரத்தனமா யோசிக்கிறோம்!"-னும் மனசுக்குள்ள தோணித்து. அப்போ கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு எங்க கம்பெனி சேர்மன் வந்தார்.

அவர் வந்து பேசின உடனே எனக்கு என் தலை மேல இடி விழுந்த மாதிரி இருந்தது. கூடவே, காலைல இருந்து இப்ப வரைக்கும் நடந்ததுக்கு அர்த்தம் புரிஞ்சுடுத்து. எனக்கு கோமளத்தையும், பரத்தையும், தீபாவையும் உடனே பார்க்கனும்னு போறேன். என்னடா இவன் பாட்டுக்கு கிளம்பிட்டானே, சேர்மன் என்ன சொன்னார்-னு உங்களுக்கு சொல்லலைனு நினைக்கிறீங்க இல்ல, அவர் ஆங்கிலத்தில சொன்னத தமிழ்ல கொடுத்து இருக்கேன், படிச்சுக்கங்க. அப்பறம் முடிஞ்சா வீட்டுக்கு வாங்க.

"உங்கள் அனைவருக்கும் இந்த காலை நேரத்தில் இந்த செய்தியை சொல்ல மிகவும் வருந்துகிறேன். நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான, கடும் உழைப்பாளியான நமது அருமை நண்பர் திரு.கிரி அவர்கள் நேற்று இரவு கடும் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி, இன்று காலை 5.30 மணிக்கு காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைப் பிரிந்து வாடும் ............"

Monday, May 07, 2007

தடயம் - அத்தியாயம் - 4

"அந்தப் படங்கள்ல இருக்கரது யாரு?"

"அருள்மொழி, அது தேவராஜ், இந்த வீட்டு ஓனர், ஏன்"

"அவர் எங்க இப்ப?"

"தெரியலை அதை கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்குது. "

"இங்க நடந்திருக்கரத வெச்சு பார்த்தா, அவரோட உயிருக்கு ஆபத்து, சீக்கிரம் கண்டு பிடிக்கனும்" என்ற அவருடைய கணிப்பைக் கேட்ட செல்வமும், சந்தானமும் உறைந்து நின்றனர்."

"அருள்மொழி, கொ‎ஞ்சம் புரியரமாதிரி சொல்லுங்க!"

"இந்த வீட்டுல அவங்க எதையும் கலைக்கல, so அவங்க கொள்ளையடிக்க வரலை. அந்த ஆளை அவங்க கொலை செய்திருக்கரதப் பாக்ரப்போ அவங்க ப்ளான், யாருக்கோ மெசேஜ் அனுப்பரது, தேவராஜைக் கடத்திகிட்டு போரது. சீக்கிரம் அவரை கண்டுபிடியுங்க, அவ்ளவுதான் சொல்லமுடியும்."

"thanks அருள்மொழி, நீங்க உங்க ரிப்போர்ட்டை குடுங்க, நாங்க அவனைக் கண்டுபிடிக்கர முயற்சியைத் தீவிரப் படுத்தரோம்."

"செல்வம், தேவராஜ் வீட்டுப் போன், அவனுடைய செல் போன் ரெண்டில இருந்தும் கடந்த ரெண்டு மாசத்துல பண்ணப்பட்ட கால் அத்தனையும் ட்ரேஸ் பண்ணுங்க, வந்த கால் எவ்வளவு, எவ்வளவு நேரம் பேசினாங்கங்ர விவரம் எல்லாம் எடுங்க. அவனோட கம்பேனி பொது மேளாளர் - நாகராஜனை வர வைங்க, அவனோட கம்பேனிக்கு அவன் காணலைங்கரது இப்ப தெரிய வேண்டாம்".

"சரி சார்"

அப்போது சந்தானத்தின் செல் போன் அடித்தது.

"இது எனக்குத் தெரிந்த நம்பர் இல்லையே" என்றபடி சற்று யோசித்தவர், "செல்வம் எதுக்கும் இந்த காலை ட்ரேஸ் பண்ணுங்க" என்றபடி அழைப்பை ஏற்று பேசத் துவங்கினார்.

"ஹலோ, சந்தானம் பேசறேன், யார் பேசரது"

"என்ன தேவராஜைக் காணும்னு தேட ஆரம்பிச்சிட்டியா?"

"யார் நீங்க?, தேவராஜ் எங்க?" என்றபடி செல்வத்திடம் பேசுவது யார் என்பது பற்றி சைகை செய்கிறார்.

"தேவராஜ் இப்ப எங்க கிட்டதான் இருக்கான், அவன் உயிரோட வேணும்னா, நாங்க சொல்றத நீ செய்யனும்."

"என்ன செய்யனும்? அதுக்கு முன்னாடி நான் தேவராஜோட பேசனும்"

"பேசலாம், அதுக்கு முன்னாடி நாங்க சொல்ற ஒரு காரியத்தை நீ பண்ணு, அதை சரியா பண்ணினா அவன்கூட பேச ஏற்பாடு செய்றோம்."

"என்ன செய்யனும்?"

"எதைச் சொன்னாலும் கண்டிப்பா செய்வியா?"

"சொல்லு கண்டிப்பா செய்யரேன்"

"அப்படியா! வெரி குட், பக்கதுல இருக்கர ஒரு கான்ஸ்டபிள டக்குனு உன் துப்பாக்கியால சுட்டு கொன்னுடு"

"வாட்!!!!"

"ரொம்ப கத்தாதே, என்ன கேட்கப் போறோம்ன்னு தெரியாம எதுக்கு வாக்கு குடுக்கர"

"உங்களுக்கு இப்ப என்ன வேணும், எதுக்காக பைக் குமாரைக் கொன்னீங்க?"

"பைக் குமாரா யார் அது?"

"என்ன விளையாடரியா, அவன் உங்காளுன்னு எனக்குத் தெரியும்"

"அப்படியா, எப்படி இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க!!"

"போதும் கிண்டல், சொல்லு எதுக்கு அவனை கொன்னீங்க?"

"இதப் பாரு, அவன் நடவடிக்கை எங்களுக்கு ஒத்து வரலை, போட்டு தள்ளிட்டோம். உனக்கு தேவை தேவராஜ், அவனப் பத்தி மட்டும் கேளு தெரியுதா?"

"சொல்லு அவன் எங்க"

"அது அப்பரம், முதல்ல அருள் மொழி சார் எங்களைப் பத்தி என்ன சொல்றாரு"

"அருள்மொழி இங்க இருக்கரது உனக்கு எப்படி தெரியும்! இங்க பாரு, உனக்கு என்ன வேணும்? தேவராஜ மேல ஒரு கீறல் கூட விழாம அவனை எனக்குத் திருப்பித் தரனும், அதுக்கு நான் என்ன செய்யனும். சொல்லு?"

"அருள்மொழி கிட்ட சொல்லு அவர் மண்டைய பிச்சுக்கரமாதிரி இனி நிறைய நடக்கப் போறது முடிஞ்சா அவருடைய அறிவை வெச்சு தடுக்கச் சொல்லு."

"என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்க"

"அவ்வளவு அவசரமா! தேவராஜ இப்போதைக்கு எதுவும் செய்யரதா இல்லை, நாங்க சொல்றத நீங்க செய்யலைன்னாதான் இருக்கு வேடிக்கை."

"தேவராஜ ஏன் கடத்தி வெச்சிருக்க, சொல்லு"

"சொல்றேன், ஏன்னா அவன் உன் அக்கா பையன். ஆமா, உனக்கு சிட்டில ஒரு வீடு இருக்கு இல்லை, அதுல இன்னிக்கு விஜிலென்ஸ் சோதனை பண்றதா இருக்காங்களாமே அது தெரியுமா?"

"வாட்! என்ன சொல்ற நீ? விஜிலென்ஸ் சோதனையா? எதுக்கு? உனக்கு எப்படி தெரியும்?"

"சந்தானம் மாமா எங்கிட்ட இவ்வளவு கேள்வி கேக்காதே, முடிஞ்சா உன் ப்ரச்சனையை தீத்துக்க, போனா போகுதேன்னு உனக்கு விஷயம் சொல்றேன். அடுத்து என்ன பண்ணலாம்னு நாங்க முடிவு பண்ணியதும் உனக்கு கால் பண்றோம்."

"ஹலோ, ஹலோ போனை கட் பண்ணாதீங்க"

"சே, வெச்சுட்டாங்க, செல்வம், இது கொஞ்சம் தீவிரமான விஷயமாதான் இருக்‏கு, இவங்களுக்கு என் செல் போன் நம்பர் தெரிஞ்சிருக்கு, பைக் குமார் கொலை இவங்களுக்கு சர்வ சாதாரணமா இருக்கு, கொலைக்கு அஞ்சாதவங்களா இருக்காங்க, நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு, இங்க நடக்கரது எல்லாம் தெரியுது. நீங்க கால் ட்ரேஸ் பண்ணினது என்ன ஆச்சுன்னு விசாரிங்க, நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்" என்றபடி வீட்டை விட்டு பதட்டத்துடன் வெளியே வந்தார். செல்வம் அவரை சந்தேகமாக பார்த்தபடி கண்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ணி பேசத்துவங்கினார்.


அப்போது அருள்மொழியின் செல்போன் ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசத் துவங்கிய அவருடைய முகம் சற்று பேயடித்தது போல் ஆனது. இது செல்வத்தின் கண்களில் இருந்து தப்ப வில்லை.

(தொடரும்)