Wednesday, December 26, 2007

தடயம் - அத்தியாயம் - 7

கந்தசாமியையும், குமரேசனையும் பார்த்து சந்தானம், "என்னய்யா! என்ன பெரிசா கண்டு பிடிச்சீங்க? சொல்லுங்க" என்றார்.

அதை கேட்ட கந்தசாமிக்கு முகம் சற்று கறுத்தது.

"என்னைய்யா என்ன கோபமா, ஒரு சின்ன வேலையை செய்துட்டு வரதுக்கு இவ்வளவு பில்டப் பண்றீங்க?"

"அப்படியெல்லாம் இல்லை சார்"

"சரி சொல்லுங்க"

கந்தசாமி பேசத்துவங்கினார்.

"சார், தேவராஜ் பத்தி அக்கம் பக்கத்தில விசாரிச்சதில அவருக்கு கோபக்காரன்னு பேயரே தவிர அவரால யாருக்கும் எந்த தொந்திரவும் அவ்வளவா இல்லை. நேத்திக்குதான் முதல் தடவையா அவருக்கும் பக்கத்தில மாணிக்கம்ன்னு ஒருத்தர் கிட்ட பெரிய வாக்கு வாதத்தில ஆரம்பிச்ச ஒரு சமாச்சாரம் அடிதடில முடிஞ்சிருக்கு. அவரைகூட நம்ம ஸ்டேஷன்ல ரிமாண்டுல வெச்சிருக்கு."

"யோவ், அது எல்லாம் எனக்குத் தெரியும், இதைத்தான் இவ்வளவு நேரம் விசாரிச்சீங்களா? விட்டா தேவராஜ் என்ன வயசு, என்ன கலர் என்ன உயரம் இதெல்லாம்கூட விசாரிச்சீங்களா?"

"செல்வம், என்னய்யா என்ன மாதிரி ஆளுங்களை வெச்சிருக்கீங்க? இதுக்கு இவங்க பண்ண பில்டப்ப பாத்துட்டு நானும் இவங்க நிறைய கண்டு பிடிச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்."

"சார், அவங்க சொல்ல வந்ததை சொல்லி முடிக்கலாமா?"

சந்தானம் அதற்கு, "சொல்லித் தொலைக்கட்டும்" என்றார் வெறுப்பாக.

கந்தசாமிக்கும், குமரேசனுக்கும் அடிபட்ட உணர்வு கண்ணில் ததும்பியது.

கந்தசாமி மீண்டும் சொல்லத்துவகினார்.

"மாணிக்கத்துடன் நடந்த சண்டை ஈவினிங் 8 - 8:30 க்கு நடந்திருக்கு. அப்பரம், ஒரு 10 - 10:30 மணிக்கு 1 ஆட்டோவில 3 ஆளுங்க வந்திருக்காங்க, அவங்க மாணிக்கம் ஆளுங்களா இல்லையான்னு தெரியலை. இங்க வீட்டு வாசல்ல வந்தவங்களுக்கும் தேவராஜுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு. அப்போ தேவராஜ் வீட்டுக்குள்ள கோபமா போயிருக்கார், வந்தவங்களும் அவர் கூடவே உள்ள போயிருக்காங்க. அப்போ மணி ஒரு 11:30 இருக்கும்."

அப்போது சந்தானம் குறுக்கிட்டு. "இருய்யா, எப்படி பக்கத்தில இருந்து பார்த்தமாதிரி டைமெல்லாம் சொல்லிகிட்டு இருக்கே?"

கந்தசாமி சொல்வதற்குள், குமரேசன் குறுக்கிட்டு, "சார், இங்க பக்கத்தில இருக்கிற பல பேருக்கு இன்னிக்கு ஈவினிங் நடந்த சண்டை ஒரு பெரிய விஷயமா இருந்திருக்கு, அவங்க எல்லாம் அங்க அங்க கூடி நின்னு பேசிகிட்டு இருக்கரப்பதான் ஆட்டோவில ஆளுங்க வந்திருக்காங்க"

சந்தானம் சற்று ஆர்வமாகி, "அப்பரம் என்ன ஆச்சு"

கந்தசாமி கண்களால் ஜாடை காட்ட, குமரேசன் தொடர்ந்தார், "ஆட்டோவில வந்தவங்க முதல்ல தேவராஜ்கூட சாதாரணமாகத்தான் பேசிக்கிட்டு இருந்திருக்காங்க, அப்பரம் அவங்கள்ள ஒருத்தன் கொஞ்சம் கோபமா ஏதோ பேசியிருக்கான், அதுல தேவராஜுக்கு கோபம் வந்து அவனை அடிக்க கை ஓங்கியிருக்காரு, அப்போ வந்தவங்க அவரை சமாதானப் படுத்தியிருக்காங்க, அதுல அவருக்கு இன்னும் அதிகமா கோபம் வந்து அவர் அவங்களோட சண்டை போட்டிருக்கார். அக்கம் பக்கத்தில எல்லோரும் பாக்கராங்கன்றது அவருக்கு தெரிஞ்சவுடனே உள்ளே போயிருக்காரு. வந்தவங்களும் அவரோடவே உள்ள போயிருக்காங்க."

செல்வம் உடனே, "வந்தவங்களை அடையாளம் காட்டச்சொன்னா இங்க அக்கம் பக்கத்தில இருக்கரவங்களால முடியுமா?"

"அதை நாங்க கேட்டு அவங்க பேரை குறிச்சு வெச்சிருக்கோம்", என்றார் கந்தசாமி.

சந்தானம் அதற்கு, "வெரி குட், நல்லா யோசிச்சிருக்கீங்க, மேல சொல்லுங்க" என்றார்.

கந்தசாமி தொடர்ந்தார், "உள்ளே போனதும், ஒரு அரை மணி நேரம் எந்த பெரிய சத்தமும் இல்லை, அப்பரம், மொதல்ல தேவராஜோட சண்டை போட்டவன் வெளியில வந்து, டேய் தேவராஜ், இருடா இன்னும் அரை அவுருல நீ என்ன ஆவுர பாருன்னு கத்திட்டு ஆட்டோவை ஓட்டிகிட்டு போயிருக்கான்."

செல்வம், "மத்த ரெண்டு பேரும் என்ன பண்ணினாங்க" என்று கேட்டார்.

அதற்கு கந்தசாமி, "மத்த ரெண்டு பேர்ல ஒருத்தன் வெளியில வந்து, ஏய் உன்னால முடிஞ்சத நீ பாத்துகடாங்கர மாதிரி ஏதோ சொல்லிட்டு உள்ள போயிட்டதா அக்கம் பக்கத்துல இருக்கரவங்க சொல்றாங்க"

"அதுக்கு மேல என்ன நடந்தது"

"ஒரு மணி நேரத்துக்கு பிறகு 2-3 ஆட்டோல 10-12 பேர் வந்திருக்காங்க, வந்து கதவை தட்டி தேவராஜ கத்தி கூப்பிட்டிருக்காங்க, அவர் கூட இருந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் வந்து கதவை திறந்து, என்னய்யா என்ன பெரிசா கொரலு விடரீங்கன்னு கத்தியிருக்கான். அவனை தள்ளிகிட்டு முதல்ல ஒரு நாலு - அஞ்சு பேரு வீட்டு உள்ள போயிருக்காங்க, அப்பரம் ரொம்ப சத்தமா சண்டை போட்டிருக்காங்க, யாரோ அடி வாங்கரமாதிரி கத்தியிருக்காங்க"

அப்போது சந்தானம், "ஏன்யா, இவ்வளவு நடந்திருக்கு, இங்க அக்கம் பக்கத்தில இருந்த ஒருத்தர்கூட போலிஸை கூப்பிடலயா, என்ன கிண்டல் பண்றாங்களா?" என்றார்.

அதற்கு கந்தசாமி, "சார் அவங்க கிண்டல் பண்ணல, அவங்க போலீஸ் கம்ளைய்ண்ட் கொடுக்காததற்கு காரணம் என்னன்னா...." என்று அவர் சொன்ன காரணத்தை கேட்டு செல்வமும், சந்தானமும் திடுக்கிட்டனர்.

(தொடரும்)

தடயம் - அத்தியாயம் - 6

"என்ன செல்வம், என்ன விஷயம்"

"வெளியில என்கொயரி பண்ணிகிட்டிருக்கர நம்ம ஆளுங்கள வந்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லிட்டு இருக்கேன், அருள் மொழி வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு போயிருக்கார், உங்கள கால் பண்ண சொல்லிட்டு போயிட்டார், துரை உங்கள உடனே கால் பண்ணச் சொன்னார். உங்களுக்கு என்ன சார் ப்ரச்சனை?"

"உங்க கிட்ட எனக்கு ப்ரச்சனைன்னு எப்ப சொன்னேன்" என்று சீறினார்.

"இல்லை அவசரமா போன் போன் பேச வெளியில போனீங்களேன்னு கேட்டேன், சாரி சார்"

"இட்ஸ் ஓகே."

"அருள் மொழிகிட்ட பேசிடறேன்"

"அப்ப துரை சார்?"

"அவரு எங்க போயிடப்போறாரு, நீங்க மெசேஜ் சொல்லிடீங்கல்ல, இனி நான் பாத்துக்கறேன்."

"ஹலோ, அருள், நான் சந்தானம் பேசறேன், என்ன மேட்டர்,.."

"..."

"இல்லை இங்க நானும் செல்வமும்தான் இருக்கோம்"

"..."

"அப்படியா!"

"..."

"நீங்க எங்க இருக்கீங்க? வீட்லயா?"

"..."

"ஹெல்ப்புக்கு யாரையாவது அனுப்பட்டுமா? செல்வத்தை அனுப்பட்டுமா?"

"..."

"டோண்ட் வொர்ரி, நான் வரட்டுமா?"

"..."

"ஓகே, வீட்டுக்கு போய் நிலவரம் தெரிஞ்சதும் எனக்கு போன் பண்ணுங்க"

"என்ன சார் என்ன ப்ரச்சனை?"

"செல்வம், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியனும்னா, நானே சொல்றேன், இப்போதைக்கு ப்ரச்சனை ஒன்னும் இல்லை. அருளோட அஸிஸ்டெண்ட்ஸ் என்ன கண்டுபிடிச்சாங்கன்னு விசாரிங்க, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிங்க, அத விட்டுட்டு தேவையில்லாம எங்கிட்ட கேள்வி கேக்கரதெல்லாம் வேண்டாம்"

"ஹலோ, துரை, நான் சந்தானம் பேசறேன், கால் பண்ணியிருந்தீங்களாம், என்ன விஷயம்"

"நான் கால் பண்ணல, செல்வம்தான் பண்ணினார். ஆமா, என்ன கண்டு பிடிச்சீங்க, செல்வமும், அவர் ஸ்டேஷன் ஆளுங்களும், நல்லா கோ-ஆப்பரேட் பண்றாங்களா?"

"ஷூர், நல்லா கோ-ஆப்பரேட் பண்றாங்க, இங்க நடந்திருக்கரது ஒரு ப்ளாண்டு ஆப்பரேஷன், அருளை பர்சனலா வரச்சொல்லி தடயங்கள எடுக்க சொல்லியிருக்கேன். கூடிய சீக்கிரம் அவங்கள நெருங்கிடுவோம். நான் அப்பரம் கால் பண்றேன்."

"செல்வம், துரைக்கு எதுக்கு போன் பண்ணினீங்க, நான் அப்பவே சொன்னேன் நாம ரெண்டு பேரும் ஒன்னா இந்த கேஸ்ல ஒர்க் பண்ணப் போறோம்னு அப்பரம் எதுக்கு என்னை கேக்காம அவருக்கு போன் பண்ணினீங்க?"

"சார், நாம ரெண்டு பேரும் ஒன்னா ஒர்க் பண்ணலாம், ஆனா துரை என்னுடைய மேலதிகாரி, அவருக்கு நான் இங்க நடக்கரது பற்றி அடிக்கடி ரிப்போர்ட் தரனும்கரது அவருடைய ஆர்டர், அதை நான் மீற முடியாது. So இனி என்ன பண்றதுங்கரதை பத்தி யோசிப்போம்."

வாசலில் பாலன் தயங்கிய படி இருந்தார், சந்தானம் அவரை பார்த்து, "யாருயா? என்ன வேணும், சீனியர் ஆபிசர்ஸ் பேசிகிட்டு இருக்கோம், கதவைத் தட்டிட்டு உள்ள வரனும்னு தெரியாது?"

"சாரி சார், என் பேர் பாலன், செல்வம் சார் ஸ்டேஷன்ல ஏட்டா வேலை செய்யறேன். வேளியில விசாரிக்க அனுப்பின கான்ஸ்டபிள்ஸ வரச் சொன்னாரு அவங்க வந்திட்டாங்க, உள்ள வரச் சொல்லாமான்னு கேக்க வந்தேன்."

"கொஞ்சம் வெளியில இருங்க நான் வந்து பாக்கரேன்" என்ற சந்தானம், "செல்வம், என்ன நடக்குது இங்க, எதுக்கு இப்ப அவங்கள என்கொயரிய முடிச்சுட்டு வரச்சொன்னீங்க? தேவராஜ் என்ன ஆனான்னு தெரியக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?"

"சார், துரை சார்தான் இன்னும் ரெண்டு மணி நேரத்தில ஒரு ரிப்போர்ட் கேட்டாரு அதனால இவங்க என்ன கண்டு பிடிச்சாங்கங்கரத தெரிஞ்சுகிட்டா நல்லதுன்னு அவங்கள வரச்சொன்னேன்."

சந்தானம், பாலனைப் பார்த்து, "யோவ் அவங்கள உள்ள வரச்சொல்லு"


உள்ளே வந்த கந்தசாமியையும், குமரேசனையும் பார்த்து சந்தானம், "என்னய்யா! என்ன பெரிசா கண்டு பிடிச்சீங்க? சொல்லுங்க" என்றார்.
அதை கேட்ட கந்தசாமிக்கு முகம் சற்று கறுத்தது.
(தொடரும்)

தடயம் - அத்தியாயம் - 5

.... அப்போது அருள்மொழியின் செல்போன் ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசத் துவங்கிய அவருடைய முகம் சற்று பேயடித்தது போல் ஆனது. இது செல்வத்தின் கண்களில் இருந்து தப்ப வில்லை.

"நிஜமாவா சொல்றே"

"ஆமாங்க"

"நீ கவலைப் படாதே, நான் எவ்வளவு சீக்கிரம் அங்க வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்க வரேன். போனை அவங்க கிட்ட குடு"

"இத பாருங்க உங்களுக்கு எது வேணும்னாலும் என்னை கேளுங்க, என் வைஃப்க்கு எதுவும் தெரியாது, அவளை தொந்தரவு செய்யாதீங்க"

"...."

"நான் அங்க வர்ரதுக்கு எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்"


"..."

"ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் தயவு பண்ணி கேளுங்க, நான் அங்க வந்த பிறகு அதைப் பத்தி முடிவு பண்ணலாம்"

"..."

"சரி நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள அங்க வரேன்" என்றபடி செல்போனை கட் செய்தார்.

"என்ன அருள் மொழி சார், என்ன ப்ரச்சனை"

திடுக்கிட்டு போய், "ஒன்னும் இல்லை செல்வம், வீட்ல ஒரு சின்ன ப்ராப்ளம், வைஃப் தனியா இருக்காங்க அதனால அவங்களுக்கு என் உதவி தேவைப் படுது, நான் கொஞ்சம் வீட்டுக்கு போய்ட்டு வரேன்"

"அப்ப இதையெல்லாம் யார் பாத்துப்பாங்க?"

"அதுக்கு நான் என் அசிஸ்டெண்ட் ஒருத்தரை விட்டுட்டு போறேன், அவருக்கு ஏதாவது உதவி தேவைன்னா எனக்கு போன் பண்ணச்சொல்றேன். சந்தானம் எங்க?"

"அவர் தோட்டத்துல ஒரு பர்சனல் கால் அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கார், இப்ப வந்திடுவார்"

"அவர் கிட்ட நான் அவசரமா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிடுங்க, அவரை எனக்கு கால் பண்ண சொல்லுங்க"

"சரி"
அவர் கிளம்பியதைப் பார்த்த உடன் செல்வம் தன் கைத் தொலைபேசியை எடுத்து மேலதிகாரி துரைசாமியை அழைத்து பேசத் துவங்கினார்.

"என்ன செல்வம் அங்க எல்லாம் ஸ்மூத்தா போகுதா?"

"எஸ் சார்"

"உங்க இஷ்டத்துக்கு எதுவும் பண்ணிடாதீங்க, எங்கிட்ட கேட்டுட்டு செய்யுங்க, ஆமா, யாரைகேட்டு அருள்மொழியை direct ஆ கூப்பிட்டீங்க?"

"சந்தானம் சார், ஆர்டர் பண்றமாதிரிதான் செய்றோம் சார். அவர்தான் அருள்மொழியை வர வழைச்சார், அது என் ப்ளான் இல்லை சார்"

"சந்தானத்து கிட்ட போனை குடுங்க"

"சார் அவர் பர்சனல் கால் அட்டெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்"

"சரி அருள்கிட்ட போனை கொடுங்க"

"சார் அவர் அவசர வேலைன்னு சொல்லிட்டு இப்பதான் வீட்டுக்கு போனார், அவர் வந்ததும் உங்களுக்கு போன் பேசச் சொல்றேன்."

"யோவ் என்னய்யா நடக்குது அங்க, ஒரு கொலை நடந்திருக்குது, ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டு வந்த கமிஷ்னர் அரட்டை அடிச்சுகிட்டு இருக்கார், தடவியல் நிபுணர் வீட்டுக்கு போயிட்டார், ஆக ரெண்டு பேரும் ஸ்பாட்ல இல்ல, அப்படித்தானே"

"சார் நான் இருக்கேன், அருள்மொழியோட அஸிஸ்டெண்ட்ஸ் 2 பேர் இருக்காங்க, கான்ஸ்டபிள்ஸ் அக்கம் பக்கத்தில விசாரிச்சுகிட்டு இருக்காங்க"

"செல்வம், இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்திலல எனக்கு full report தயார் பண்ணி என் டேபிள்ல இருக்கனும். சந்தானம் ஃப்ரீயானதும் எனக்கு கால் பண்ணச் சொல்லுங்க"

"ஓகே சார்" என்றபடி இணைப்பைத் துண்டித்தார்.

செல்வம் வாசலுக்கு வந்து கான்ஸ்டபிளிடம், "பாலன், வெளியில விசாரிச்சுட்டு இருக்கர நம்ம ஆளுங்கள இன்னும் ஒரு 20 அல்லது 30 நிமிஷம் கழிச்சு இங்க வரச்சொல்லுங்க, எனக்கு அவங்க என்ன கண்டு பிடிச்சிருக்காங்கன்னு தெரியனும்"

"சரி சார், நான் இப்பவே போய் சொல்லிடரேன், வெளியில காவலுக்கு 2 கான்ஸ்டபிள்ஸ்தான் இருக்காங்க போதுமா, இல்லை B3 ல இருந்து ஆளுங்கல வரவழைக்கவா?"

"இருங்கரவங்க போதும், தேவைப்பட்டா சொல்லிக்கலாம்"


"சார், சந்தானம் சார் வர்ராரரு"

"என்ன செல்வம், என்ன விஷயம்"

"வெளியில என்கொயரி பண்ணிகிட்டிருக்கர நம்ம ஆளுங்கள வந்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லிட்டு இருக்கேன், அருள் மொழி வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு போயிருக்கார், உங்கள கால் பண்ண சொல்லிட்டு போயிட்டார், துரை உங்கள உடனே கால் பண்ணச் சொன்னார். உங்களுக்கு என்ன சார் ப்ரச்சனை?"

"உங்க கிட்ட எனக்கு ப்ரச்சனைன்னு எப்ப சொன்னேன்" என்று சீறினார்.

(தொடரும்)