Tuesday, December 26, 2006

தடயம் - அத்தியாயம் - 3

"செல்வம், அதப் பாருங்க!"

அதைப் பார்த்த செல்வம், அதிர்ந்து போய் நின்றார்.

ஓரு பெரிய கத்தி ரத்தத்துடன் அந்த மூலையில் கிடந்தது.

"சார் அந்த கத்தி இவ்வளவு நேரம் இங்க இல்லை! திடீர்னு இங்க எப்படி வந்தது? ஒரே மர்மமா இருக்கு!" என்றார்.

"அந்த ஜன்னல் கதவு கொஞ்சம் திறந்து இருக்கு பாருங்க"

செல்வம் அந்த ஜன்னலைத் திறக்கப் போனார்.

"அதைத் தொடாதீங்க அதுல கைரேகை இருக்க சான்ஸ் இருக்கு. மொதல்ல நான் சொன்ன விஷயங்களை கவனிங்க. ஃபோரன்ஸிக் லேப்க்கு ஃபோன் பண்ணி, அருள்மொழியை கான்டாக்ட் பண்ணி அவரால இங்க வரமுடியுமான்னு கேளுங்க. நான் வீட்டுக்குப் பின்பக்கம் போறேன், என்னை அங்க வந்து பாருங்க" என்றபடி அவர் பின் பக்க கதவை தன் கர்சீஃபால் தள்ளி திறந்து கொண்டு சென்றார்.

சந்தானம் குறிப்பிட்ட அருள்மொழி, தடவியல் துறையில் ஒரு சாதாரண உதவியாளராக 20 வருடங்களுக்கு முன்பு சேர்ந்தவர் தன் தனித் திறமையால் இன்று மிக அத்துறையின் இயக்குனராக இருக்கிறார். அவருடைய ஃபோட்டோகிராஃப்பிக் மெமரி, மற்றும் எதையும் சற்று வித்தியாசமாக பார்க்கத் தெரிந்த கலை அவரை சந்தானத்துக்கு மிக நெருங்கியவராக்கியது. அருள்மொழியின் திறமையால் முடிவுக்கு வரமுடியாத பல கேஸ்களை காவல்துறை சுலபமாக தீர்த்து வைத்திருக்கிறது. அருள்மொழி யாருக்காகவும் தன் குறிப்புகளை மாற்றி எழுத மாட்டார். அவருக்கு சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. இது செலவத்துக்கும் தெரியும். செல்வத்துக்கு இப்போது சந்தானத்தின் மீது முழு நம்பிக்கை வந்தது.

செல்வம் தன் செல்ஃபோனை எடுத்து ஃபோரன்ஸிக் லேபுக்கு பேசினார், அருள்மொழி இல்லை என்றதும் அவரை செல்ஃபோனில் பிடித்து நடந்ததைச் சொல்லி அவரை வரமுடியுமா என சந்தானம் கேட்டதைச் சொன்னார். அதற்கு அவர், "சந்தானம், என்னை தனிப்பட்டு வரச் சொல்றார்னா இது முக்கியமான கேஸாதான் இருக்கும். நான் ஒரு 15 நிமிஷத்தில அங்க வந்திடறேன். எதையும் கலைக்காம பார்த்துக்கங்க. மறுபடி அந்த அட்ரஸை சொல்லுங்க" என்று கேட்டுக் கொண்டார்.

பிறகு செல்வம் ஃபோட்டோகிராபருக்கு ஃபோன் செய்து தேவராஜின் வீட்டிற்கு வரச்சொன்னார். ஒரு கான்ஸ்டபிள கூப்பிட்டு, "பாலன், வேன்ல இருக்கர ரெண்டு பேரையும், நம்ம ஸ்டேஷனுக்கு கொண்டு போங்க ரைட்டர் வரதன் வந்திருப்பார் அவர்கிட்ட இவங்கள இந்த கேஸ்ல சஸ்பெக்ட்டா ட்ரீட் பண்ணி லாக்கப்ல வெக்க சொல்லிட்டு நீங்க சீக்கிரமா வாங்க".

"சரி சார்"

"வெளில இருக்கர கான்ஸ்டபிள்ஸ்ல 2 பேரை அக்கம் பக்கத்துல சந்தேகப் படற மாதிரி யார் இருந்தாலும் விசாரிக்கச் சொல்லுங்க, ரெண்டு பேரை வாசல்ல காவலுக்கு வெச்சுட்டு, நீங்க ட்ரைவர் சாமிகண்ணுவ கூட்டிகிட்டு போங்க"

"சரிங்க சார்"
செல்வமும், சந்தானத்தை போலவே பின் பக்க கதவை தன் கர்சீஃபால் தள்ளி திறந்து கொண்டு சென்றார். அங்கு சந்தானம் திறந்து இருந்த ஜன்னலின் அருகில் குனிந்து எதையோ பார்த்துக் கொண்டு இருந்தார்.
"ஐயா, தடவியல் நிபுணருக்கும், புகைப்படம் எடுப்பவருக்கும் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு ஏதும் தடயம் கிடைத்ததா?"
"செல்வம் என்ன ஆச்சு? ஏன் திடீர்னு சுத்தத் தமிழ்ல பேசரீங்க?"
"ஒன்னும் இல்லை, இந்த கதைல ரொம்ப ஆங்கிலம் கலந்து இருக்குன்னு புகார் வந்திருக்காம், சுத்தத் தமிழ்ல பேசச் சொல்லி கதாசிரியர் சொன்னார், சரின்னு முயற்சி பண்ணினேன், ஆனா எனக்கே என்ன சொல்றேன்னு புரியல"
"இந்த கொலை கேசுல கொஞ்சம் கூட நாம இன்னும் கண்டு பிடிக்கல நீங்க என்னடான்னா விளையாட்டா பேசிட்டிருக்கீங்க, கொஞ்சம் தீவிரமா யோசிப்போமா?"
"சாரி சார், ஃபோரன்ஸிக் லேபுக்கும், ஃபோட்டோ கிராஃப்பருக்கும் சொல்லிட்டேன். நீங்க என்ன கண்டுபிடிச்சீங்க?"
"இங்க இருந்துதான் அந்த கத்தியை உள்ள போட்டிருக்காங்க, ஜன்னலுக்கு பக்கமா ஒருத்தர் நின்ன ஷூ மார்க் இருக்கு, ஜன்னல்ல பிரிண்ட்ஸ் இருக்கலாம், கைக்கு க்ளவுஸ் போட்டிருந்தா ப்ரிண்ட்ஸ் இருக்காது, இப்படி கொலை பண்ற கும்பல் க்ளவுஸ் போட்டுட்டு வர சான்ஸ் ரொம்ப கம்மி. கத்தில இருக்கர ப்ளட் செத்து கிடக்கர பைக் குமார்தான்னு சரி பார்க்கனும்".
"இப்ப வந்திடுவாங்க வந்ததும் சொல்லிடறேன்".
"அக்கம் பக்கத்தில விசாரிச்சீங்களா?"
"இல்லை"
"பரவாயில்லை, நானே விசாரிக்கறேன், நீங்க கூட வாங்க".
அப்போது ஒரு கான்ஸ்டபிள் வந்து "சார், ஃபோரன்ஸிக் லேப்ல இருந்து வந்திருக்காங்க, ஒரு போட்டோகிராப்பரும் வந்திருக்கார்"
"உடனே உள்ளே அனுப்புங்க" கான்ஸ்டபிள் வேகமாக வாசல்புறம் நோக்கி ஓடுகிறார்.
செல்வமும், சந்தானமும் பின்புற வழியாக வீட்டினுள் வருகின்றனர்.
அருள்மொழியைப் பார்த்தவுடன் சந்தானம், "வாங்க அருள்மொழி, எப்படி இருக்கீங்க".
"நல்லா இருக்கேன். பார்த்து ஒரு 2 மாசம் ஆச்சுல்ல! Let me take a look around and we will talk later".
ஒரு 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் சந்தானத்தின் பக்கம் வந்து, "இது கேன்ங் ஸ்டைல் கொலை மாதிரி இருக்கு. அதே சமயம் இதைச் செய்தவங்க ரொம்ப புத்திசாலிங்க, ஒரு ஆளா செய்த மாதிரி தெரியலை, கண்டிப்பா ஒரு 4-5 பேர் இதை சேர்ந்து செய்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். என் அசிஸ்டெண்ட்ஸ் ப்ரிண்ட்ஸ் எடுத்திட்டிருக்காங்க, நிறைய ப்ரிண்ட்ஸ் இருக்கு, எல்லாத்தையும் லிஃப்ட் பண்ண சொல்லியிருக்கேன். நீங்க ஏதாவது தடயம் எடுத்தீங்களா?"
"அந்த பின்பக்க ஜன்னல் வழியா ஒரு கத்தியை யாரோ போட்டிருக்காங்க, ஜன்னல்ல ப்ரிண்ட்ஸ் இருக்கலாம், ஜன்னல் பின் பக்கம் ஒரு ஷு மார்க் இருக்கு அதையும் கொஞ்சம் பாருங்க. "
"அதையும் லிஃப்ட் பண்ணிடச் சொல்றேன். நான் நிறைய கண்டு பிடிச்சுருக்கேன், அதுக்கு முன்னாடி அந்தப் படங்கள்ல இருக்கரது யாரு?"
"அது தேவராஜ், இந்த வீட்டு ஓனர், ஏன்"
"அவர் எங்க இப்ப?"
"தெரியலை அதை கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்குது. "
"இங்க நடந்திருக்கரத வெச்சு பார்த்தா, அவரோட உயிருக்கு ஆபத்து, சீக்கிரம் கண்டு பிடிக்கனும்" என்ற அவருடைய கணிப்பைக் கேட்ட செல்வமும், சந்தானமும் உறைந்து நின்றனர்.
(தொடரும்)

2 comments:

Jayakanthan - ஜெயகாந்தன் said...

enna sir, thadayatha tholachutingala? I guess you are busy with the "Mega" drama for RTS event?! Sikram intha thodara continue pannunga...

நாகு (Nagu) said...

என்னாச்சு. கொலை கேஸ் நாலு மாசமா ஊறப்போட்ட கொலைகாரன் இதுக்குள்ள ஒரு தெருவையே முடிச்சிட்டு வெகேஷனுக்கே போயி வந்துருப்பான் போல இருக்கு!!!