Sunday, May 25, 2008

தடயம் - அத்தியாயம் - 11

அவரை கிட்டத்தில் பார்த்ததும் செல்வம் சற்று அதிர்ந்து போனார்.

"இது என்ன கனவா இல்லை நிஜமா? ஜார்ஜ் நீங்க எப்படி இங்க!" என்று இழுத்தார்.

"செல்வம், இது நிஜம்தான். துரை எனக்கு போன் பண்ணி நீங்க ஒரு என்கவுண்டர் பண்ணப் போறதாகவும், அதுக்கு என் உதவி வேணும்னும் சொன்னார். நான் உடனே, என் டீம் ஆளுங்கள கலெக்ட் பண்ணிட்டு அவர் சொன்ன மாதிரி அவங்க 8 பேரை ஹோட்டல் பார்க் ஷெரட்டான் அனுப்பிட்டு நான் இங்க வந்தேன். இதுக்கே இவ்வளவு ஆச்சரியப் படரீங்களே, என் கூட யார் வந்திருக்காங்க தெரியுமா?"

"யார் வந்திருக்காங்க?"

"பாரி சார் வந்திருக்கார்" என்று ஜார்ஜ் சொல்லும் போதே, காரின் பின் சீட்டிலிருந்து பாரி இறங்கினார்.

பாரி - இவர் எக்ஸ் கமாண்டோ, இவர் பிரதமரோட பூனைப் படையில சீனியர் செக்யூரிடி பிரிவில் இருந்தவர், தற்சமயம் ஸ்பெஷல் ட்யூடியா, தமிழ்நாட்டு போலீஸோட என்கவுண்டர் டீமுக்கு ட்ரைய்னிங் கொடுக்கரார். இவரைப் பத்தி தெரிஞ்சவங்க சொல்றது இவர் ரவுடிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் டெரர். இவரைப் பார்த்ததும் செல்வத்துக்கு பேச்சே வரவில்லை.

"என்ன செல்வம், ஒன்னும் பேச்சே இல்லை, நான் வந்தது பிடிக்கலையா?"

"பாரி சார், என்ன இப்படி கேக்கரீங்க, உங்க கூட வொர்க் பண்றது எவ்வளவு பெரிய சான்ஸ், அதை யோசிச்சு மலைச்சு போயிட்டேன். நீங்க எப்படி இங்க..."

"துரைகூட ஒரு மீட்டிங்ல இருந்தேன், அப்ப உங்க போன் வந்தது, நானும் ஜார்ஜ்கூட போய் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன், ஒரு 6 பேர ஜார்ஜோட ஆளுங்க கூட அனுப்பிட்டேன். இன்னொரு விஷயம், நீங்க யாருக்கோ வயர்லெஸ் மைக் செட் பண்ணனும்னு கேட்டீங்களாம், கொண்டு வந்திருக்கோம், பண்ணிடலாமா?"

"AC சந்தானத்தின் சர்ட் பட்டனில ஒன்னும் முடிஞ்சா அவருடைய ஷீவில ஒன்னும் வெக்கலாமா?"

"கண்டிப்பா. அவரை மீட் பண்ணலாமா?"

"வாங்க. அதுக்கு முன்னாடி நான் சொன்னதெல்லாம் கிடைச்சுதா"

"யெஸ் செல்வம்"

"குட், 8 மணிக்கு ஹோட்டல் பார்க் ஷெரட்டான் பின்னாடி நிக்கப் போற ஆட்டோவுல டிப்பார்ட்மெண்ட்ல இருந்து அருளும் AC சந்தானமும் போகப் போராங்க, அவங்க பாதுக்காப்புக்காகவும், அவங்க காப்பாத்த போற இன்னும் ரெண்டு பேருக்காகவும்தான் இந்த ஏற்பாடெல்லாம்."

"ஆட்டோவை ட்ரேஸ் பண்ணியாச்சா?"

"ஆட்டோ நம்பர் TN - 09 - 7916 இதை ட்ரேஸ் பண்ணச் சொல்லியிருக்கேன், அதுல ஒரு ட்ராக்கிங் டிவைஸ் வெக்க சொல்லியிருக்கேன். அது விவரம் இன்னும் ஒரு சில நிமிஷத்தில தெரிய வரும்."

"ட்ராக்கிங் வேன் நாங்க இங்க கிளம்பி வரும்போதே கிளம்பியாச்சு"

"எஸ், இப்பதான் எனக்கும் தகவல் வந்துச்சு, ட்ராக்கிங் வேனை ஹோட்டல் பக்கத்தில நிக்க வெச்சாச்சு. சந்தானம் சார், மைக் வெச்சுட்டு டெஸ்ட் பண்ணி பாக்கனும்னு சொல்வாரு, அதுக்கு ஆயத்தமா வந்திருக்கீங்களா"

"எஸ்"

"குட், நாம மூனு பேரும் உள்ள போய் மைக் செட் பண்ணுவோம், மத்தவங்க இங்கயே இருக்கட்டும். நாம மைக் செட் பண்ணிட்டு வந்ததும் கிளம்பனும் "

"வாங்க செல்வம்" என்ற சந்தானம், செல்வத்துடன் வந்த ஜார்ஜையும் பாரியையும் பார்த்தவுடன் அவருடைய ஆச்சர்யத்தை அடக்க முடியாமல், "வாவ், ஜார்ஜ், பாரி என்னது இது பெரிய யுத்ததுக்கே தயாராகிட்டீங்க போல இருக்கு! செல்வம் இவங்கள எப்படி டீம்ல சேர்த்தீங்க?"

"சார், நான் இவங்களை டீம்ல சேர்க்க ரொம்ப மெனக்கெடலை. துரை தான் இந்த ஏற்பாடெல்லாம் செய்தது. கவலையே படாதீங்க தேவராஜையும் அருளோட மகள் ஸ்ரீநிதியையும் பத்திரமா கொண்டு வந்திடலாம். உங்களுக்குததான் தெரியுமே, பாரி எலக்ட்ரானிக்ஸ் விஷயத்திலயும் எக்ஸ்பர்ட்ன்னு, இவர் வயர்லெஸ் மைக் செட் கொண்டு வந்திருக்கார். இப்போ உங்களுக்கு வயர்லெஸ் மைக் செட் பண்ணி டெஸ்ட் பண்ணிடுவார், அதுக்கப்பறம் நீங்க கிளம்பலாம்."

"குட், எனக்கு மைக் செட்டை ஷர்ட் பட்டனிலும், கால் ஷூவிலேயும் வெச்சுடுங்க. பாரி, வெப்பன்ஸ் ஏதாவது எடுத்துகிட்டு போக வழியிருக்கா?"

"ஷூர். ஒரு சின்ன கத்தி செட் இருக்கு அதை ஒரு ஷூக்கு அடிப்புறம் வெச்சிடலாம், அதை கண்டு பிடிக்கரது கஷ்டம், தேவைப் படரபோது பின்னங்காலை அழுத்தினா முன் பக்கம் கத்தி வரும் எதிராளியை எட்டி உதைச்சா ஒரு 6 இன்ச் அவனை பதம் பாத்திடும். ரொம்ப கூர்மையான கத்தி. திரும்பியும் பின்னங்காலை அழுத்தினா கத்தி உள்ள போயிடும். அதை நான் செட் பண்ணிடறேன்."

"அதை என் ஷீவில வெக்க முடியுமா?"

"நோ, அதுக்கு ஸ்பெஷல் ஷீ வேணும், உங்க ஷூ சைஸ் என்னன்னு சொல்லுங்க, என் ஜீப்ல இருக்கான்னு பாக்கரேன்."

"என் ஷீ சைஸ் 10"

"வெரிகுட். என் கிட்ட 10 நம்பர் ஷீ இருக்கு, அதுதான் என் ஷீ சைசும். நான் போய் ஜீப்ல இருந்து கொண்டு வர்றேன்".

"எக்ஸலண்ட், செல்வம், எனக்கு தேவராஜை ஒரு ஆபத்தும் இல்லாம கூட்டிகிட்டு வந்திடலாங்கர நம்பிக்கை வந்திடுச்சு."

"சார், நீங்க தைரியமா இருக்கரத பாக்கரப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதே சமயம் பைக் குமாரை கொலை செய்தது அந்த கும்பலா இல்லாம தேவராஜா இருந்தா, நாம தேவராஜ காப்பாத்தினாலும், நான் அவரை அரஸ்ட் பண்ண வேண்டியிருக்கும்."


"டாமிட், நான் கொஞ்சம் தைரியமா இருந்தா உங்களுக்கு பொறுக்காதே, உடனே இப்படி ஏதாவது டார்ச்சர் கொடுத்தாகனுமே" என்று சிடுசிடுத்தார்.

செல்வம் மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக சந்தானத்தை பார்த்தார்.

ஜார்ஜ், இந்த விவாதத்தில் செல்வம் சற்றும் சலனமில்லாமல் இருப்பதை சட்டென்று மனதிலேயே நோட் செய்து கொண்டு செல்வத்தைப் பார்த்து மெலிதாக புனனகைத்தார். அதற்கு செல்வம் கண்ணாலேயே ஏதோ சொல்ல அதை ஜார்ஜ் ஆமோதிக்கும் வகையில் முகத்தை வேறு பக்கம் திருப்புவது போல் தலையசைத்தார். இது சந்தானத்தின் பார்வையில் படவில்லை.

அப்போது பாரி உள்ளே வந்தபடியே, "சந்தானம் சார், இந்த ஷூவை ட்ரை பண்ணிப் பாருங்க, அப்படியே கொஞ்சம் கத்தியை வெளிய எடுக்க ப்ராக்டிஸ் பண்ணுங்க" என்றார்.

சந்தானம் ஷீவைப் போட்டு பார்த்து விட்டு, "எனக்கு சரியா இருக்கு, அந்த கத்தியை எடுத்து பார்க்கிறேன்" என்றபடி பாரி சொன்னது போல பின்னங்காலை அழுத்தி கத்தியை வெளி கொண்டு வந்து விட்டு, மறுபடி அழுத்தி கத்தியை உள்ளே மடக்கி, இதை மேலும் இரண்டு முறை செய்து பார்த்தார். பிறகு பாரியைப் பார்த்து, "பாரி, ப்யூட்டிபுல், இது ரொம்ப சரியா வரும் போல இருக்கு. நீங்க மைக் வெச்சுடுங்க, நாங்க கிளம்பர நேரமாயிடுச்சு" என்றார்.

பாரி சந்தானத்தின் சர்ட் பட்டனின் பின்புறம் ஒரு மைக்கும், ஷீவின் உள்புறம் ஒரு மைக்கும் வைத்தார். பின் கையில் இருந்த ஒரு வாக்கி டாக்கி மூலம் தனது உதவியாளரை அழைத்து ட்ராக்கிங் மற்றும் ரெகார்டிங் மெஷினை ஆன் செய்ய சொல்லி அதை டெஸ்ட் செய்ய சொன்னார், அவருடைய பதிலை கேட்டு பிறகு சந்தானத்தை பார்த்து,

"சந்தானம் சார், மைக் ரெண்டும் சரியா வேலை செய்கிறது. நீங்களும் அருளும் கிளம்பலாம், நாங்க எல்லாரும் முதல்ல கிளம்பி போயிடுவோம், ரெண்டு கான்ஸ்டபிள்ஸ்ஸ மஃப்டில இங்க தெரு முனையில நிக்க வெச்சுட்டு வந்திருக்கோம், அவங்க உங்க காரை யாருக்கும் தெரியாம தொடர்ந்து வருவாங்க, நடுவுல யாராவது உங்கள தாக்கவோ அல்லது வழி மறிக்கவோ ப்ளான் பண்ணினா அவங்க ரெண்டு பேரும் உங்களை காப்பத்துவாங்க"

"ரெண்டு பேர் எப்படி எங்களை காப்பாத்த முடியும்"

"அவங்க ரெண்டு பேரும் என்னோட டாப் ஸ்டூடண்ட்ஸ், அவங்க ரெண்டு பேர் சேர்ந்தா ஒரு 20-30 பேருக்கு சமம். அதோட அவங்க எது நடந்தாலும் எனக்கு தகவல் சொல்லிடுவாங்க, நான் ஒரு 3-4 நிமிஷத்தில அங்க வந்திடுவேன். இப்ப நாங்க கிளம்பரோம்" என்றபடி வெளியில் செல்ல ஆரம்பித்தார். அவர் செல்வதைப் பார்த்து விட்டு ஜார்ஜும் கிளம்பி சென்றார்.

செல்வம், சந்தானத்துக்கு விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து விட்டு, "சார் நாங்க அடுத்து உங்களை அவங்க இடத்திலதான் பார்ப்போம். நடுவில பார்த்தாலும் உங்களை கண்டுக்காமல் இருப்போம். நாங்க போலீஸ் ட்ரெஸில் வராமல் மஃப்டியில் வருவோம்" என்ற சொல்லிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் ஜார்ஜ் மற்றும் பாரியுடன் சேர்ந்து கொண்டு வெளியில் சென்றார்.


(தொடரும்)

Saturday, May 17, 2008

தடயம் அத்தியாயம் - 10

"டாமிட், சொல்லுங்க அருள். மாட்டிகிட்டு இருக்கிறது உங்க மகள் மட்டும் இல்லை, என் அக்கா மகன் தேவராஜும்தான். ரெண்டு பேரையும் கடத்தியிருக்கிறது ஒரே கும்பல்தான். நீங்க தயங்கர ஒவ்வொரு நிமிஷமும் அவங்க உயிருக்கு ஆபத்து. So, சீக்கிரம் சொல்லுங்க" என்று இறைந்தார் சந்தானம்.

"சரி, இனிமே மூடி மறைச்சு ஒன்னும் ஆகப் போகரதில்லை, நடக்கரது நடக்கட்டும். அவங்க டிமாண்ட் என்னன்னா, நீங்களும் நானும் தனியா அவங்க சொல்ற ஒரு இடத்துக்கு வரனும். வரும்போது, கூட செல்வமோ அல்லது வேற யாராவதோ வந்தா என் மகளை உயிரோட பார்க்க முடியாது. கைல துப்பாக்கியோ அல்லது வேறு ஏதாவது ஆயுதமோ கொண்டு வரக்கூடாது. அப்படி கொண்டு வந்தா நாமளே உயிரோட அவங்க சொல்ற இடத்தில இருந்து திரும்பி வர முடியாது. அவங்க தேவராஜப் பத்தி ஒன்னும் சொல்லலை, அதனால அவங்ககிட்ட தான் தேவராஜ் இருக்காரான்னு தெரியலை. இருக்கலாம், ஆனா கன்பர்ம்ட்டா சொல்ல முடியாது. செல்வம் கண்டிப்பா நம்ம கூட வரமுடியாது என்ன பண்றது சொல்லுங்க?"

"அருள், செல்வத்தைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க, அவர் நம்ம கூட வரமாட்டார், ஆனா அவர் நம்மள யாருக்கும் தெரியாம பின் தொடர்ந்து வருவார், தேவையான டைம்ல கரெக்ட்டா உள்ள பூந்து அந்த ஆளுங்களை பிடிப்பார். போதுமா"

"இருந்தாலும் ...." என்று இழுத்தார் அருள்மொழி.

"அருள்மொழி சார், சந்தானம் சார் சொன்னா மாதிரி, நான் யாருக்கும் தெரியாம உங்களை தொடர்ந்து வருவேன், சரியான சமையத்தில நானும், எங்க ஆளுங்களும், அவங்களைப் பிடிச்சிடுவோம்."

"சந்தானம் சார், நான் சி.டி.சி.ஐ.டி. ஆஃபீஸுக்கு போன் பண்ணி தகவல் சொல்றேன். எப்படியும் ஒரு 30-45 நிமிடத்தில நாம கிளம்பிடலாம்"

"குட். அந்த ஏற்பாட்டை நீங்க பாருங்க, நான் அவங்களைப் பிடிக்கரதுக்கு இன்னோரு ஐடியா வெச்சு இருக்கேன். என் பாண்ட் பட்டன்லயும், என் ஷர்ட் காலர் பட்டன்லயும் வையர்லெஸ் மைக்ரோ போன்ஸ் வெச்சிடுங்க. ரிசப்ஷன் எப்படி இருக்குன்னு கொஞ்சம் டெஸ்ட் பண்ணிடுங்க. ரிசப்ஷன் பார்ட்டிகளை ஒரு வேன்ல எங்க காரை தொடர்ந்து வரச் சொல்லுங்க. யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி ஒரு டப்பா வேனை யூஸ் பண்ணுங்க. நமக்குள்ள ஒரு கோட் வேர்ட் வெச்சுக்கலாம். ம்... எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு நான் அவங்களை கேட்டா அதுதான் உங்களுக்கு சிக்னல், ஓகே, உடனே உள்ள வந்திடுங்க. குறைந்த பட்சம் 15-20 ஆளுங்கள கூட்டிகிட்டு வாங்க"

"ஓகே சார்" என்றபடி செல்வம் செல்போனில் சி.டி.சி.ஐ.டி. ஆஃபீஸுக்கு தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார்.

அவர் பேசும் போது சந்தானமும் அருளும் அவரையே பார்த்தபடி இருந்தனர். செல்வம்
போனில் பேசி முடித்து விட்டு அவர்கள் பக்கம் திரும்பியதும், சந்தானம் அருளைப் பார்த்து
பேசத் துவங்கினார். "அருள், எத்தனை மணிக்கு, எங்க வரனும்னு அவங்க சொன்னாங்களா?"

"ராத்திரி 8 மணிக்கு, அடையார் பார்க் ஷெரட்டான் ஹோட்டலுக்கு பின் புறம் இருக்கிற சந்துல ஒரு ஆட்டோ நிக்கும் அதோட ட்ரைவர்கிட்ட ஒரு 500 ரூபாய் கொடுத்து அதுக்கு எவ்வளவு தூரம் போகலாமோ அங்க போகனும்னு சொன்னா அவன் நம்மள இந்த கும்பல் இருக்கர இடத்துல கொண்டு போய் விட்டுடுவான்."

"அருள், ராத்திரி 8 மணிக்கு அந்த ஹோட்டல் சந்துல 10-15 ஆட்டோ நிக்கும் அதுல இந்தக் கும்பல சேர்ந்த ஆட்டோ எதுன்னு எப்படி கண்டு பிடிக்கரது"

"சந்தானம் அவங்க ஆட்டோ நம்பர் சொல்லியிருக்காங்க. அது TN - 09 - 7916"

"செல்வம், அந்த ஆட்டோவை ட்ரேஸ் பண்ணி அது யாரோடது, என்ன அட்ரெஸ், எல்லா டீடெயில்ஸும் சேகரியுங்க.

"யெஸ் சார்"

செல்வம் சி.டி.சி.ஐ.டி. ஆஃபீஸுக்கு மறுபடி தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார், அப்போது ஆட்டோ நம்பரையும் தந்தார். பிறகு அவர்களிடம் சற்று நேரம் பேசிவிட்டு சந்தானம் பக்கம் திரும்பினார்.

அதை குறிப்பால் உணர்ந்த சந்தானம் "அருள் நீங்க ரெடியாகுங்க, நான் செல்வத்துக்கிட்ட பேசிட்டு வந்ததும் நாம கிளம்பலாம்"

"செல்வம், வாங்க நாம வாசலுக்கு போய் பேசலாம்"

"செல்வம், இது ஒரு பயங்கரமான கும்பல் மாதிரி தெரியுது, நீங்க கொஞ்சம் ஜாக்ரதையா இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ணனும். அவங்க கிட்ட மாட்டிகிட்டு இருக்கரது அருளோட மகள் மட்டும் இல்லை நம்ம தேவராஜும்தான். நான் அருளை கூட்டிகிட்டு அவங்க சொன்ன மாதிரி அந்த ஆட்டோவை பிடிச்சு அவங்க இடத்துக்கு போறேன், நீங்க அந்த ஆட்டோவை தொடர்ந்து வாங்க. நான் அவங்க இடத்துக்கு போனதும் அவங்க என்னை கண்டிப்பா ஏதாவது மைக்ரோஃபோன் இருக்கான்னும், ஆயுதம் இருக்கான்னும் பார்ப்பாங்க, அதனால ஆயுதம் இல்லாமதான் நான் போகப் போறேன். மைக்ரோஃபோன் இல்லாம போகமுடியாது, அந்த ரிஸ்க் நான் எடுத்துதான் ஆகனும். வேற என்ன பண்ணலாம்னு ஏதாவது தோணுதா?"

"சார், ப்ளான் இதுவரைக்கும் சரியாதான் இருக்கு, ஆனா...."

"என்ன இழுக்கரீங்க சொலுங்க"

"ராத்திரி நேரத்தில ஒரு ஆட்டோவை பின் தொடர்ந்து வரது ரொம்ப கஷ்டம், அதனால்..."

"அதனால என்ன? சொல்லுங்க"

"நான் ரெண்டு கான்ஸ்டபிள்ஸ தனித்தனியா ரெண்டு பைக்ல ஆட்டோவை தொடர்ந்து போகச் சொல்றேன், நானும் ரெண்டு டீம் ஆளுங்களும் ஒரு நாலு கார்ல அந்த ஆட்டோவை தொடர்ந்து வருவோம். ஒரு வேளை நாங்க மிஸ் பண்ணினாலும், பைக்ல வரவங்க மிஸ் பண்ண மாட்டாங்க. அவங்க எங்களுக்கு ஆட்டோ போகிற இடத்தை சொல்லிடுவாங்க. நாங்க உங்க சிக்னலுக்கு வெயிட் பண்ணுவோம், சிக்னல் கிடைக்கரதுக்குள்ள உள்ள நுழையரதுக்கு ஏதாவது சான்ஸ் கிடைச்சுதுன்னா அதை பயன் படுத்திப்போம்"

"குட், எப்ப வயர்லெஸ் மைக் வருது"

"என் டீம் ஆளுங்க இங்க எடுத்துட்டு வர்ராங்க, இன்னும் ஒரு 10-15 நிமிஷத்தில கிடைச்சிடும். வந்ததும் செட் பண்ணி டெஸ்ட் பண்ணிடலாம்."

"ஓகே, நான் உள்ள போய் அருளை தயார் பண்றேன், நீங்க மைக் கிடைச்சதும் சொல்லுங்க"

சந்தானம் உள்ளே போனதும், செல்வம், செல்போனில் டீம் எங்கிருக்கிறது என்பதையும், மற்ற விஷயங்களையும் உறுதி செய்து கொண்டார். பிறகு அவ்ர் துரைக்கு போன் செய்து அனைத்து விஷயத்தையும் சொல்லி அவரோடு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார், அப்போது ஒரு ஜீப் வரவும் துரையிடம் சொல்லிவிட்டு அந்த ஜீப்பை நோக்கி ஓடினார்.

அவர் ஓடி வருவதை பார்த்த ஜீப்பிலிருந்தவர்கள் சற்று திகைப்படைந்தாலும், சுதாரித்துக் கொண்டு ஜீப்பின் ட்ரைவர் சீட்டிலிருந்து ஒருவர் சற்று விரைப்பாக நின்றார்.

அவரை கிட்டத்தில் பார்த்ததும் செல்வம் சற்று அதிர்ந்து போனார்.

"இது என்ன கனவா இல்லை நிஜமா? நீங்க எப்படி இங்க!" என்று இழுத்தார்.

(தொடரும்)

Monday, February 04, 2008

தடயம் - அத்தியாயம் - 9

சந்தானமும், செல்வமும் சென்ற சந்தானத்தின் கார், அருள்மொழியின் வீட்டுத் தெருவில் நுழைந்தது.

அருள்மொழியின் வீட்டு வாசலில் சந்தானத்தை எதிர் பார்த்தது போல நின்றிருந்த அருள்மொழியின் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்து செல்வமும், சந்தானமும் அதிர்ந்தனர்.

"என்ன அருள்மொழி என்ன ஆச்சு?"

"சந்தானம், என் மகளைக் கடத்திட்டாங்க"

"வாட்!! யாரு? எப்ப? எப்படி? எதுக்காக? மேல் விவரம் சொல்லுங்க" என்று பரபரத்தார் சந்தானம்.

"சந்தானம் சார், நீங்க இவ்வளவு எமோஷனலாகி நான் பார்த்ததே இல்லை, கொஞ்சம் அமைதியா இருங்க நான் விசாரிக்கறேன்" என்று அவரை சமாதானப் படுத்தினார் செல்வம்.

"அருள்மொழி சார், போலீஸுக்கு சொல்லிட்டீங்க இல்லை, கவலைப் படாதீங்க இனி நாங்க பாத்துக்கறோம்."

"அதுதான் வேண்டாம்னு நான் சந்தானத்தை கூப்பிட்டேன், நீங்களும் வருவீங்கன்னு தெரியாது. அவங்களோட முதல் கண்டிஷன், நான் போலீஸுக்கு போகக் கூடாதுங்கரது. சந்தானம் என் நண்பர் அதனால அவரை கன்சல்ட் பண்ணலாம்னு வரச்சொன்னேன். கூடவே நீங்களும் வருவீங்கன்னு தோணலை"

"அருள்மொழி சார், போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டோட தினம் தினம் பழகிட்டு நீங்களே இப்படி ஒரு க்ரிமினலுக்கு பயந்தா, அப்பரம் பொது மக்கள் என்ன செய்வாங்க. முதல்ல, என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க"

"நான் அங்க தேவராஜ் வீட்டில இருந்தப்போ, என் வீட்டில இருந்து போன் வந்தது, அங்க இருந்து என் மகள் பேசினாள். வீட்டுக்கு உள்ள ஒரு 5-6 பேர் வந்திருக்கரதாகவும், அவங்க என்கிட்ட பேசனும்னு சொன்னதாகவும், ஒவ்வொருத்தரும் கத்தி, துப்பாக்கின்னு வெச்சுருக்கரதாகவும், சொன்னாள். நான் அந்த ஆளுங்க கிட்ட அப்பவே பேசினேன், அவங்க சீக்கிரம் நான் என் வீட்டுக்கு வரனும்ன்னும், இல்லைன்னா என் அடுத்த கேஸ் என் வீட்டில நடக்கப் போற அசம்பாவிதம்தான்னும் சொன்னாங்க. அதனால நான் உடனே கிளம்பி வந்தேன்."

"அப்புறம்"

"நான் நேரா என் வீட்டுக்கு வந்தேன், என் மனைவி மட்டும் தான் அழுதுகிட்டு இருந்தாள். என்ன ஆச்சுன்னு விசாரிச்சதுல வந்தவங்க அவளை மிரட்டி உட்கார வெச்சுட்டு, என் மகளைக் கடத்திகிட்டு போயிட்டாங்கன்னும், நான் வந்ததும் அவங்க கிட்ட பேசினா எல்லாம் சரியாகிடும், என் மகளுக்கு எந்த ப்ரச்சனையும் வராதுன்னும், சொல்லிட்டு போயிருக்காங்க. அவங்க போய் 2-3 நிமிஷத்தில நான் வந்துட்டேன்."

"உங்க மகள் போட்டோ ஒன்னு கொடுங்க, அதோட அவங்க பேர், வயசு விவரம் சொல்லுங்க"

"போட்டோ தரச் சொல்றேன், அவ பெயர், க்ருத்திகா, வயசு, 22."

"க்ருத்திகா, எங்கயாவது வேலைக்குப் போறாங்களா? இல்லை படிச்சுகிட்டிருக்காங்களா?"

"அவ இப்பதான் ஒரு தனியார் கம்பெனில வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கா. கை நிறைய சம்பளம். அவளுக்கு இந்த வருட கடைசில கல்யாணத்திற்கு பார்க்கலாம்னு இருந்தோம், அதுக்குள்ள இப்படி ஆகிப் போச்சு" என்றபடி கலங்கத் துவங்கினார்.

"ஆமா, நான் உங்ககிட்ட பேசினபோது நீங்க ஏன் இதைப் பத்தி எதுவும் சொல்லலை" என்று கேட்டார் சந்தானம்.

"நீங்க அப்ப பேசினபோது அவங்க யாரு என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுகிட்டதும் உங்ககிட்ட சொல்லாம்னு இருந்துட்டேன். "

"இப்ப அவங்க யாருன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா?"

"இல்லை. அதனாலதான் நான் உங்களுக்கு போன் பண்ணி பார்த்துட்டு, நீங்க போன் எடுக்கலைன்னதும், செல்வத்துக்கு போன் பண்ணி உங்களை உடனே இங்க வரச் சொன்னேன்."

"அவங்க கிட்ட பேசினீங்களே, அவங்க டிமாண்ட் என்ன"

இதைக் கேட்டவுடன், அவருடைய முகம் சட்டென்று மாறுவதை செல்வம் கவனித்தார்.

"டிமாண்ட்-னு ஒன்னும் இல்லை"

"நிஜமாவா!, ஹூம் இண்ட்ரஸ்டிங்" என்றபடி சந்தானம் யோசிக்கத் துவங்கினார்.

"இப்ப உங்க மனைவி எங்க?"

"உள்ள இருக்கா செல்வம், ஏன் கேக்கரீங்க?"

"அவங்களைப் பார்த்து, கொஞ்சம் விசாரிக்கனும்."

"செல்வம், அவ இப்ப யார்கிட்டயும் பேசர நெலமைல இல்லை. ப்ளீஸ், கொஞ்சம் புரிஞ்சுக்கங்க."

"உங்க வீட்டுப் பெண்ணை தூக்கிட்டு போனவங்க யாரு? அவங்களுக்கு என்ன வேணும்? ஏன் ஒன்னும் டிமாண்ட் பண்ணலைன்னு தெரியனும். அவங்களுக்கு உங்க வீடு தெரிஞ்சிருக்கு, அவங்களை உங்க மகளும் மனைவியும் பார்த்திருக்காங்க, அவங்க அடையாளம் சொன்னா எங்களால அந்த ஆளுங்களை ஈசியா ட்ரேஸ் பண்ண முடியும். அதனால அவங்கள கொஞ்சம் வரச்சொல்லுங்க" இப்போது சந்தானத்தின் குரலில் சற்று கண்டிப்பு தெரிந்தது. இதைக் கேட்டதும், அருள்மொழிக்கும், சற்று திகைப்பாகத்தான் இருந்தது. அதைவிட செல்வத்திற்கு, சந்தானம், நிதானத்திற்கு வந்துவிட்டார் என்பது தெரிந்தது.

அப்போது அருள்மொழி, "சந்தானம், எனக்கு உதவி பண்ணுவீங்கன்னு வரச்சொன்னா, என்னையே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?"

"அருள்மொழி, உங்களை கேள்வி கேக்கரது, உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்குத்தான். கொஞ்சம் நிதானமா, எங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க."


அருள்மொழி சற்று சங்கடத்துடன், "சரி கேளுங்க" என்றார்.

"ஓளிக்காம சொல்லுங்க, அவங்க டிமாண்ட் என்ன?"

"சந்தானம், அதுதான் முன்னாடியே சொன்னேனே, அவங்க டிமாண்ட் னு ஒன்னும் கேக்கலை"

"ரியலி!!, என்ன அருள்மொழி உங்களுக்கு தெரியாதா? யார் பொய் சொல்றாங்க, யார் நெஜம் சொல்றாங்கன்னு எங்க சர்வீஸ்ல, பார்த்த உடனே எங்களால சொல்ல முடியுமே?" என்றார் செல்வம்.

சந்தானம் பார்வையாலேயே செல்வத்தை அடக்கி விட்டு, "அருள், போலீஸ் கிட்ட மறைக்காதீங்க, சொல்லுங்க, அவங்க டிமாண்ட் என்ன?"

"சந்தானம், அப்படி ஒன்னும் இல்லை" என்று கெஞ்ச ஆரம்பித்தது அருள்மொழியின் குரல்.

"டாமிட், சொல்லுங்க அருள். மாட்டிகிட்டு இருக்கிறது உங்க மகள் மட்டும் இல்லை, என் அக்கா மகன் தேவராஜும்தான். ரெண்டு பேரையும் கடத்தியிருக்கிறது ஒரே கும்பல்தான். நீங்க தயங்கர ஒவ்வொரு நிமிஷமும் அவங்க உயிருக்கு ஆபத்து. So, சீக்கிரம் சொல்லுங்க" என்று இறைந்தார் சந்தானம்.

"சரி, இனிமே மூடி மறைச்சு ஒன்னும் ஆகப் போகரதில்லை, நடக்கரது நடக்கட்டும். அவங்க டிமாண்ட் என்னன்னா...." என்று அருள்மொழி சொல்லத் துவங்கினார்.

(தொடரும்)

தடயம் - அத்தியாயம் - 8

சந்தானம், "ஏன்யா, இவ்வளவு நடந்திருக்கு, இங்க அக்கம் பக்கத்தில இருந்த ஒருத்தர்கூட போலிஸை கூப்பிடலயா, என்ன கிண்டல் பண்றாங்களா?" என்றார்.

அதற்கு கந்தசாமி, "சார் அவங்க கிண்டல் பண்ணல, அவங்க போலீஸ் கம்ளைய்ண்ட் கொடுக்காததற்கு காரணம் என்னன்னா...." என்று அவர் சொன்ன காரணத்தை கேட்டு செல்வமும், சந்தானமும் திடுக்கிட்டனர்.

செல்வம் பதட்டத்துடன், "என்ன கந்தசாமி சொல்றீங்க, நீங்க சொல்றது நிஜமா?"

"யெஸ் சார்"

சந்தானம் அறையின் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தார், அவர் நடக்க ஆரம்பித்ததும் அனைவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டனர்.

ஒரு ஐந்து நிமிடம் மெளனமாக நடந்து கொண்டிருந்த அவர், சட்டென்று நின்றார். திரும்பி கந்தசாமியைப் பார்த்து, "அதாவது, சண்டை போட்டுட்டு வெளியே போனவன் திரும்பி வந்த போது அவனோட 3 ஆட்டோல வந்தது அவனுடைய ஆளுங்க. அவங்க இங்க தேவராஜ் குடி வரதுக்கு 4-5 மாசங்களுக்கு முன்னாடி ஒரு ஆளை பட்டப் பகல்ல வெட்டி போட்டிருக்காங்க அதனால இங்க இருக்கரவங்களுக்கு அவனைக் கண்டா பயம், so, அவங்க போலீஸுக்கு போன் பண்ணல. இப்போ இங்க குடியிருக்க ஒருத்தர் வீட்டிலேயே ஒரு கொலை நடந்திருக்கு, குடியிருந்த ஒரு இளைஞனைக் காணலை, அதனால அவங்க சாட்சி சொல்ல ரெடியா இருக்காங்க, ம் ம் வெரி இண்ட்ரஸ்டிங்" என்றவர், செல்வம் பக்கம் திரும்பி "இந்த கான்சப்ட்ல நிறைய ஓட்டை இருக்கு அதை அப்புறம் பாக்கலாம்." கந்தசாமியைப் பார்த்து "நீ மேல சொல்லுய்யா" என்றார்.

அவருடைய மரியாதையில்லாத தொணி கந்தசாமிக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், மேலதிகாரி என்பதால் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதைப் புரிந்து கொண்ட செல்வம், "குமரேசன் நீங்க சொல்லுங்க" என்றார்.

"சார், வீட்டு உள்ள ஒருத்தன் அடிவாங்கி கத்தும் சத்தத்தை கேட்டுட்டு வெளியில இருந்த மிச்ச பேரும் உள்ள போயிருக்காங்க, கொஞ்ச நேரம் கழிச்சு எல்லோரும் வெளியில வந்திருக்காங்க, அவங்க தேவராஜ இழுத்துகிட்டு போயிருக்காங்க."

"உள்ள தேவராஜ்கூட இருந்த ரெண்டு பேர் என்ன ஆனாங்க?"

"தெரியலை, போகும் போது வாசல் விளக்கை அணைச்சிட்டு போயிருக்காங்க, அதனால இங்க இருந்தவங்களுக்கு யாரெல்லாம் வெளியில வந்தாங்கன்னு தெரியலை, ஆனா அவங்க தேவராஜ இழுத்துட்டு போனது மட்டும் சுமாரா தெரிஞ்சிருக்கு."

"போலீஸுக்கு யார் போன் பண்ணினது"

"இங்க இருக்கரவங்க யாரும் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்து முடிச்ச போது மணி 1 ல இருந்து 1:30 க்குள்ள இருக்கும்".

உடன் சந்தானம் துள்ளி குதித்து, "அப்பதான் எனக்கு போன் வந்தது"

செல்வம் அதற்கு, "அது சரியா இருக்கு, ஆனா, அதுக்கு அப்பரம் ஒரு 7 மணி நேரம் கழிச்சு எங்களுக்கு போன் பண்ணினது யாரு?" என்று குழப்பத்துடன் கேட்டார்.

சந்தானம், கந்தசாமி மற்றும் குமரேசனைப் பார்த்து, "வெரி குட் நல்லா கண்டு பிடிச்சிருக்கீங்க, இதை ஒரு ரிப்போர்ட்டா சீக்கிரம் கொடுங்க, இப்ப நீங்க ரெண்டு பேரும் புறப்படலாம்" என்றார்.

அவர்கள் அறையை விட்டு போகும் வரை மெளனமாக இருந்த அவர், செல்வத்தைப் பார்த்து, "என்ன செல்வம் என்ன நினைக்கிறீங்க இந்த கேசைப் பத்தி" என்று கேட்டார்.

"நீங்க குறிப்பிட்ட அந்த ஓட்டைகளைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்."

"அந்த ஓட்டைகளை நான் பாத்துக்கறேன், நீங்க உருப்படியா வேற ஏதாவது தோணினா சொல்லுங்க."

"சார் நான் என்ன சொல்ல வர்றேன்னா...." என்று செல்வம் இழுக்கத் துவங்க.

"செல்வம், அந்த ஓட்டைகளைப் பத்தி நான் பார்த்துக்கறேன்னு ஒரு தடவை சொன்னா உங்களுக்குப் புரியாதா? போய் துரைக்கு ரிப்போர்ட் தயார் பண்ணுங்க. மிச்சத்தை நான் பாத்துக்கறேன்."

செல்வம் ரொம்ப அடிபட்டவர் போல சந்தானத்தைப் பார்த்தார். பிறகு, "சார், இந்த கேஸ்ல நீங்களும் நானும் ஒன்னா ஒர்க் பண்றதாதான் முடிவு பண்ணினோம், நீங்க பேசரத பார்த்தா, நான் உங்களுக்கு ரிப்போர்ட் பண்றேன்னு முடிவு பண்ணிடீங்களா? இது என் ஜூரிஸ்டிக்ஷன்ல நடந்திருக்கிர கொலை மற்றும் ஆள் கடத்தல், இதை கண்டுபிடிக்க என்னை தடை செய்ய உங்களுக்கு எப்படி உரிமை இருக்குன்னு தெரியலை. நான் துரைக்கு ரிப்போர்ட் அனுப்பிட்டு உங்ககிட்ட பேசறேன்." என்றபடி வாசல் புறம் நோக்கி சென்றார்.

சந்தானம், செல்வம் சென்ற திசையை நோக்கி சற்று நேரம் திகைப்போடு பார்த்த படி இருந்தார். பிறகு, சடாரென்று எழுந்து கொண்டு, அறையில் குறுக்கும் நெடுக்கும் நடை போட ஆரம்பித்தார்.

இது வரை நடந்த அனைத்தையும் மனதில் அசை போட ஆரம்பித்தார், அவருக்கு கந்தசாமியும், குமரேசனும் சேகரித்துச் சொன்ன செய்தியில் இருந்த அபத்தங்கள், ஓட்டைகள் தெளிவாகப் புரியத் துவங்கியது. அருகில் இருந்த மேசையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து எழுதத் துவங்கினார்.

அப்போது அறையின் உள்ளே செல்வம் தயங்கி நிற்பதைப் பார்த்தார்.

"வாங்க செல்வம், என்ன துரைக்கு ரிப்போர்ட் தயார் பண்ணிட்டீங்களா? கோபமெல்லாம் இன்னும் இருக்கா, இல்லை கொஞ்சமாவது குறைஞ்சதா?" என்றார்.

"துரைக்கு ரிப்போர்ட் அனுப்பிட்டேன். கோபமெல்லாம் இல்லை. வருத்தம்தான் அதிகமா இருக்கு. தேவராஜ் உங்க சொந்தம்ங்கரதால உங்களுக்கு இந்த கேஸ்ல ஆர்வம் அதிகமா இருக்கு, ஆனா, அதனால நீங்க எத்தனை பேரை காயப் படுத்தரீங்கன்னு உங்களுக்குப் புரியுதான்னு தெரியலை"

"புரியுது செல்வம், நான் கொஞ்சம் வரம்பு மீறி தான் இந்த கேஸ்ல நடந்துக்கறேன். அதுக்கு தனித் தனியா நான் உங்க கிட்ட அப்புறம் மன்னிப்பு கேட்டுக்கறேன். இப்ப இந்த பாயிண்ட்ஸ பாருங்க, இதுல ஏதாவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்க?"

அவர் காட்டிய காகிதத்தில் ஒன்று ரெண்டு என்று வரிசைப் படுத்தி 10 பாயிண்ட்ஸ் எழுதியிருந்தது.

1. கொலை நடந்தது நடு இரவு 1:30
2. சந்தானத்திற்கு செய்தி உடனே சொல்லப்பட்டது
3. செல்வத்திற்கு 7 மணி நேரம் கழித்து சொல்லப்பட்டது
4. செய்தி சொன்னவர்கள் இங்கிருப்பவர் யாரும் இல்லை
5. கொலை குரூரமாக நடந்திருக்கிறது
6. கொலை செய்தவர்களுக்கு இங்கு நடப்பது உடனுக்குடன் சொல்லப் பட்டிருக்கிறது
7.கொலையாளிகளில் ஒரு ஆள் வேவு பார்க்கவும், சமயம் கிடைக்கும் போது ஒரு தடயத்தை வைக்கவும் இங்கிருந்திருக்கிறான். அவனை இங்கிருந்தவர்கள் யாரும் பார்க்கவில்லை.
8. சரியான சமயத்தில் அந்த கும்பலால் அருள்மொழியை இங்கிருந்து அப்புறப் படுத்தவும் முடிந்திருக்கிறது
9. என்னுடைய செல் போன் விவரம் தெரிந்து அதில் என்னை தொடர்பு கொண்டு என்னுடன் மிரட்டலாகப் பேசவும் தைரியம் உள்ள கும்பல் இது.
10. என்னைப் பற்றிய பல விவரங்கள் தெரிந்துள்ள கும்பல் இது.

"செல்வம், எனக்கு வந்த காலை ட்ரேஸ் பண்ணச் சொன்னேனே அது என்ன ஆச்சு? ஜன்னலுக்கு வெளியில பார்த்த ஷீ மார்க் ப்ரிண்ட்ல இருந்து ஏதாவது தெரிஞ்சுதா? உள்ள கிடந்த கத்தியில இருந்த ரத்தம் யாருடையது?"

"சார், உங்களுக்கு வந்த காலை ட்ரேஸ் பண்ணினதுல அது ஒரு PCO-ல இருந்து வந்த கால்ன்னு தெரிஞ்சுருக்கு, அங்க விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கேன்"

"வெரி குட்"

"ஷீ மார்க்ல இருந்து பெரிசா ஒன்னும் க்ளூ இல்ல, அதுல முன் பக்கம் அழுத்தமான ப்ரிண்ட்டும் குதிகால் ப்ரிண்ட் அவ்வளவு சரியாவும் இல்லை"

"அப்படியா!"

"ஆமாம்"

"அந்த ரத்தம் யாருடையது"

"கத்தியில இருந்த ரத்தம் பைக் குமாரொடதுதான்"

"வெரிகுட், கொஞ்சம் என்கூட வாங்க"

"எங்க சார்"

"எனக்கு அந்த ஷீ மார்க் இருந்த ஜன்னல் கிட்ட ஒரு விஷயம் பார்க்கனும்"

ஓட்டமும் நடையுமாக இருவரும் அந்த ஜன்னலருகே வந்தனர்.

"செல்வம், இந்த ஜன்னல் தரையிலிருந்து 6 அடி உயரத்தில இருக்கு, அந்த கத்தியை இங்கிருந்து போட்டவனுக்கு உயரம் பத்தலை, அதனால எக்கி நின்னு போட்டிருக்கான் அதனாலதான் ஷீ முன் பக்கம் மார்க் நல்லா இருக்கு, குதிகால் மார்க் அவ்வளவு சரியா இல்லை. அதை கன்பர்ம் பண்ணிக்கத்தான் வந்தேன். வாங்க உள்ள போகலாம்"

"ப்ரில்லியண்ட். இது எனக்கு தோணவே இல்லை"

"இட்ஸ் ஓகே. வாங்க நாம கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கு"


அப்ப சந்தானத்தின் செல் போனில் கால் வந்தது.

"செல்வம் என் வீட்டுல இருந்து போன், நீங்க அருள்மொழி ஆளுங்க என்ன கண்டு பிடிச்சாங்கன்னு விசாரிங்க நான் இந்த காலை அட்டண்ட் பண்ணிட்டு உள்ள வரேன்"

"சொல்லும்மா, என்ன விஷயம்"

"நீங்க எங்க இருக்கீங்க"

"ஒரு கேஸ் விஷயமா வந்திருக்கேன். ஏன் என்ன விஷயம்?"

"கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு போன் வந்தது அதுல நம்ம தேவராஜ யாரோ கடத்திட்டதாவும், அவங்கள உங்களால கண்டு பிடிக்க முடியாதுன்னும் சொன்னாங்க. ஏங்க, நம்ம தேவராஜ கடத்திட்டாங்களா?"

"ஆமாம்மா, அதைத்தான் விசாரிச்சுகிட்டு இருக்கேன். கவலைப் படாதே, நான் அவனை கண்டு பிடிச்சு எப்படியும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வரேன்."

என்றபடி போனை கட் பண்ணி விட்டு உள்ளே வந்தார்.

செல்வம், சற்று தயங்கியபடி வந்தார்.

"என்ன செல்வம், என்ன விஷயம்?"

"சார், அருள்மொழி போன் பண்ணினார், உங்க செல் போனுக்கு போன் பண்ணினாராம், லைன் கிடைக்கலேன்னு எனக்கு போன் பண்ணினார்"

"அருள்மொழி என்ன சொன்னார்" என்று சந்தானம் பரபரப்பானார்.

"உங்கள உடனே அவரோட வீட்டுக்கு வரச் சொன்னார்"

"ஹூம், அருள்மொழி தேவையில்லாம என்னை உடனே வரச்சொல்லியிருக்க மாட்டார், நான் போய் பாக்கறேன். இங்க அவரோட ஆட்கள் என்ன கண்டு பிடிச்சாங்க?"

"அதிகம் இல்லை, அவங்க லேபுக்கு போய் பல டெஸ்ட் பண்ண வேண்டியிருக்கிறதால அங்க போயிருக்காங்க."

"நீங்க இங்க ரெண்டு கான்ஸ்டபிள்ஸ காவலுக்கு போட்டுட்டு, என் கூட வாங்க நாம் அருள் மொழியை பார்த்துட்டு வரலாம்"

"ஒரு 10 நிமிடம் கொடுங்க, நீங்க சொன்ன ஏற்பாட்டை செய்துட்டு வரேன்" என்ற படி, வாசல் புறம் விரைந்தார்.

சந்தானம், அடுத்த 10 நிமிடமும், வீட்டை மீண்டும் ஒரு முறை தீவிரமாக பார்வையிட்டார், சில குறிப்புகளை எழுதிக் கொண்டார். அப்போது செல்வம் உள்ளே வந்து "போகலாமா சார்" என்றார்.

"யெஸ் வாங்க"

இருவரும் வெளியே வந்தார்கள்.

"செல்வம், என் காரிலேயே போயிடலாம், ஜீப் வேண்டாம்."

'ஓகே சார்"

15 நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் கார், அருள்மொழியின் வீட்டுத் தெருவில் நுழைந்தது.

அருள்மொழியின் வீட்டு வாசலில் சந்தானத்தை எதிர் பார்த்தது போல நின்றிருந்த அருள்மொழியின் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்து செல்வமும், சந்தானமும் அதிர்ந்தனர்.

(தொடரும்)