Monday, May 07, 2007

தடயம் - அத்தியாயம் - 4

"அந்தப் படங்கள்ல இருக்கரது யாரு?"

"அருள்மொழி, அது தேவராஜ், இந்த வீட்டு ஓனர், ஏன்"

"அவர் எங்க இப்ப?"

"தெரியலை அதை கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்குது. "

"இங்க நடந்திருக்கரத வெச்சு பார்த்தா, அவரோட உயிருக்கு ஆபத்து, சீக்கிரம் கண்டு பிடிக்கனும்" என்ற அவருடைய கணிப்பைக் கேட்ட செல்வமும், சந்தானமும் உறைந்து நின்றனர்."

"அருள்மொழி, கொ‎ஞ்சம் புரியரமாதிரி சொல்லுங்க!"

"இந்த வீட்டுல அவங்க எதையும் கலைக்கல, so அவங்க கொள்ளையடிக்க வரலை. அந்த ஆளை அவங்க கொலை செய்திருக்கரதப் பாக்ரப்போ அவங்க ப்ளான், யாருக்கோ மெசேஜ் அனுப்பரது, தேவராஜைக் கடத்திகிட்டு போரது. சீக்கிரம் அவரை கண்டுபிடியுங்க, அவ்ளவுதான் சொல்லமுடியும்."

"thanks அருள்மொழி, நீங்க உங்க ரிப்போர்ட்டை குடுங்க, நாங்க அவனைக் கண்டுபிடிக்கர முயற்சியைத் தீவிரப் படுத்தரோம்."

"செல்வம், தேவராஜ் வீட்டுப் போன், அவனுடைய செல் போன் ரெண்டில இருந்தும் கடந்த ரெண்டு மாசத்துல பண்ணப்பட்ட கால் அத்தனையும் ட்ரேஸ் பண்ணுங்க, வந்த கால் எவ்வளவு, எவ்வளவு நேரம் பேசினாங்கங்ர விவரம் எல்லாம் எடுங்க. அவனோட கம்பேனி பொது மேளாளர் - நாகராஜனை வர வைங்க, அவனோட கம்பேனிக்கு அவன் காணலைங்கரது இப்ப தெரிய வேண்டாம்".

"சரி சார்"

அப்போது சந்தானத்தின் செல் போன் அடித்தது.

"இது எனக்குத் தெரிந்த நம்பர் இல்லையே" என்றபடி சற்று யோசித்தவர், "செல்வம் எதுக்கும் இந்த காலை ட்ரேஸ் பண்ணுங்க" என்றபடி அழைப்பை ஏற்று பேசத் துவங்கினார்.

"ஹலோ, சந்தானம் பேசறேன், யார் பேசரது"

"என்ன தேவராஜைக் காணும்னு தேட ஆரம்பிச்சிட்டியா?"

"யார் நீங்க?, தேவராஜ் எங்க?" என்றபடி செல்வத்திடம் பேசுவது யார் என்பது பற்றி சைகை செய்கிறார்.

"தேவராஜ் இப்ப எங்க கிட்டதான் இருக்கான், அவன் உயிரோட வேணும்னா, நாங்க சொல்றத நீ செய்யனும்."

"என்ன செய்யனும்? அதுக்கு முன்னாடி நான் தேவராஜோட பேசனும்"

"பேசலாம், அதுக்கு முன்னாடி நாங்க சொல்ற ஒரு காரியத்தை நீ பண்ணு, அதை சரியா பண்ணினா அவன்கூட பேச ஏற்பாடு செய்றோம்."

"என்ன செய்யனும்?"

"எதைச் சொன்னாலும் கண்டிப்பா செய்வியா?"

"சொல்லு கண்டிப்பா செய்யரேன்"

"அப்படியா! வெரி குட், பக்கதுல இருக்கர ஒரு கான்ஸ்டபிள டக்குனு உன் துப்பாக்கியால சுட்டு கொன்னுடு"

"வாட்!!!!"

"ரொம்ப கத்தாதே, என்ன கேட்கப் போறோம்ன்னு தெரியாம எதுக்கு வாக்கு குடுக்கர"

"உங்களுக்கு இப்ப என்ன வேணும், எதுக்காக பைக் குமாரைக் கொன்னீங்க?"

"பைக் குமாரா யார் அது?"

"என்ன விளையாடரியா, அவன் உங்காளுன்னு எனக்குத் தெரியும்"

"அப்படியா, எப்படி இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க!!"

"போதும் கிண்டல், சொல்லு எதுக்கு அவனை கொன்னீங்க?"

"இதப் பாரு, அவன் நடவடிக்கை எங்களுக்கு ஒத்து வரலை, போட்டு தள்ளிட்டோம். உனக்கு தேவை தேவராஜ், அவனப் பத்தி மட்டும் கேளு தெரியுதா?"

"சொல்லு அவன் எங்க"

"அது அப்பரம், முதல்ல அருள் மொழி சார் எங்களைப் பத்தி என்ன சொல்றாரு"

"அருள்மொழி இங்க இருக்கரது உனக்கு எப்படி தெரியும்! இங்க பாரு, உனக்கு என்ன வேணும்? தேவராஜ மேல ஒரு கீறல் கூட விழாம அவனை எனக்குத் திருப்பித் தரனும், அதுக்கு நான் என்ன செய்யனும். சொல்லு?"

"அருள்மொழி கிட்ட சொல்லு அவர் மண்டைய பிச்சுக்கரமாதிரி இனி நிறைய நடக்கப் போறது முடிஞ்சா அவருடைய அறிவை வெச்சு தடுக்கச் சொல்லு."

"என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்க"

"அவ்வளவு அவசரமா! தேவராஜ இப்போதைக்கு எதுவும் செய்யரதா இல்லை, நாங்க சொல்றத நீங்க செய்யலைன்னாதான் இருக்கு வேடிக்கை."

"தேவராஜ ஏன் கடத்தி வெச்சிருக்க, சொல்லு"

"சொல்றேன், ஏன்னா அவன் உன் அக்கா பையன். ஆமா, உனக்கு சிட்டில ஒரு வீடு இருக்கு இல்லை, அதுல இன்னிக்கு விஜிலென்ஸ் சோதனை பண்றதா இருக்காங்களாமே அது தெரியுமா?"

"வாட்! என்ன சொல்ற நீ? விஜிலென்ஸ் சோதனையா? எதுக்கு? உனக்கு எப்படி தெரியும்?"

"சந்தானம் மாமா எங்கிட்ட இவ்வளவு கேள்வி கேக்காதே, முடிஞ்சா உன் ப்ரச்சனையை தீத்துக்க, போனா போகுதேன்னு உனக்கு விஷயம் சொல்றேன். அடுத்து என்ன பண்ணலாம்னு நாங்க முடிவு பண்ணியதும் உனக்கு கால் பண்றோம்."

"ஹலோ, ஹலோ போனை கட் பண்ணாதீங்க"

"சே, வெச்சுட்டாங்க, செல்வம், இது கொஞ்சம் தீவிரமான விஷயமாதான் இருக்‏கு, இவங்களுக்கு என் செல் போன் நம்பர் தெரிஞ்சிருக்கு, பைக் குமார் கொலை இவங்களுக்கு சர்வ சாதாரணமா இருக்கு, கொலைக்கு அஞ்சாதவங்களா இருக்காங்க, நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு, இங்க நடக்கரது எல்லாம் தெரியுது. நீங்க கால் ட்ரேஸ் பண்ணினது என்ன ஆச்சுன்னு விசாரிங்க, நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்" என்றபடி வீட்டை விட்டு பதட்டத்துடன் வெளியே வந்தார். செல்வம் அவரை சந்தேகமாக பார்த்தபடி கண்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ணி பேசத்துவங்கினார்.


அப்போது அருள்மொழியின் செல்போன் ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசத் துவங்கிய அவருடைய முகம் சற்று பேயடித்தது போல் ஆனது. இது செல்வத்தின் கண்களில் இருந்து தப்ப வில்லை.

(தொடரும்)

1 comment:

நாகு (Nagu) said...

என்னய்யா - நம்ப ஊர் போலிஸ்லாம் இப்ப துடியா இருக்காங்கன்னு கேள்வி. இங்க கொலைக்கேஸு மூணு மாசமா தூங்குது?