Wednesday, December 26, 2007

தடயம் - அத்தியாயம் - 5

.... அப்போது அருள்மொழியின் செல்போன் ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசத் துவங்கிய அவருடைய முகம் சற்று பேயடித்தது போல் ஆனது. இது செல்வத்தின் கண்களில் இருந்து தப்ப வில்லை.

"நிஜமாவா சொல்றே"

"ஆமாங்க"

"நீ கவலைப் படாதே, நான் எவ்வளவு சீக்கிரம் அங்க வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்க வரேன். போனை அவங்க கிட்ட குடு"

"இத பாருங்க உங்களுக்கு எது வேணும்னாலும் என்னை கேளுங்க, என் வைஃப்க்கு எதுவும் தெரியாது, அவளை தொந்தரவு செய்யாதீங்க"

"...."

"நான் அங்க வர்ரதுக்கு எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்"


"..."

"ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் தயவு பண்ணி கேளுங்க, நான் அங்க வந்த பிறகு அதைப் பத்தி முடிவு பண்ணலாம்"

"..."

"சரி நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள அங்க வரேன்" என்றபடி செல்போனை கட் செய்தார்.

"என்ன அருள் மொழி சார், என்ன ப்ரச்சனை"

திடுக்கிட்டு போய், "ஒன்னும் இல்லை செல்வம், வீட்ல ஒரு சின்ன ப்ராப்ளம், வைஃப் தனியா இருக்காங்க அதனால அவங்களுக்கு என் உதவி தேவைப் படுது, நான் கொஞ்சம் வீட்டுக்கு போய்ட்டு வரேன்"

"அப்ப இதையெல்லாம் யார் பாத்துப்பாங்க?"

"அதுக்கு நான் என் அசிஸ்டெண்ட் ஒருத்தரை விட்டுட்டு போறேன், அவருக்கு ஏதாவது உதவி தேவைன்னா எனக்கு போன் பண்ணச்சொல்றேன். சந்தானம் எங்க?"

"அவர் தோட்டத்துல ஒரு பர்சனல் கால் அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கார், இப்ப வந்திடுவார்"

"அவர் கிட்ட நான் அவசரமா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிடுங்க, அவரை எனக்கு கால் பண்ண சொல்லுங்க"

"சரி"
அவர் கிளம்பியதைப் பார்த்த உடன் செல்வம் தன் கைத் தொலைபேசியை எடுத்து மேலதிகாரி துரைசாமியை அழைத்து பேசத் துவங்கினார்.

"என்ன செல்வம் அங்க எல்லாம் ஸ்மூத்தா போகுதா?"

"எஸ் சார்"

"உங்க இஷ்டத்துக்கு எதுவும் பண்ணிடாதீங்க, எங்கிட்ட கேட்டுட்டு செய்யுங்க, ஆமா, யாரைகேட்டு அருள்மொழியை direct ஆ கூப்பிட்டீங்க?"

"சந்தானம் சார், ஆர்டர் பண்றமாதிரிதான் செய்றோம் சார். அவர்தான் அருள்மொழியை வர வழைச்சார், அது என் ப்ளான் இல்லை சார்"

"சந்தானத்து கிட்ட போனை குடுங்க"

"சார் அவர் பர்சனல் கால் அட்டெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்"

"சரி அருள்கிட்ட போனை கொடுங்க"

"சார் அவர் அவசர வேலைன்னு சொல்லிட்டு இப்பதான் வீட்டுக்கு போனார், அவர் வந்ததும் உங்களுக்கு போன் பேசச் சொல்றேன்."

"யோவ் என்னய்யா நடக்குது அங்க, ஒரு கொலை நடந்திருக்குது, ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டு வந்த கமிஷ்னர் அரட்டை அடிச்சுகிட்டு இருக்கார், தடவியல் நிபுணர் வீட்டுக்கு போயிட்டார், ஆக ரெண்டு பேரும் ஸ்பாட்ல இல்ல, அப்படித்தானே"

"சார் நான் இருக்கேன், அருள்மொழியோட அஸிஸ்டெண்ட்ஸ் 2 பேர் இருக்காங்க, கான்ஸ்டபிள்ஸ் அக்கம் பக்கத்தில விசாரிச்சுகிட்டு இருக்காங்க"

"செல்வம், இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்திலல எனக்கு full report தயார் பண்ணி என் டேபிள்ல இருக்கனும். சந்தானம் ஃப்ரீயானதும் எனக்கு கால் பண்ணச் சொல்லுங்க"

"ஓகே சார்" என்றபடி இணைப்பைத் துண்டித்தார்.

செல்வம் வாசலுக்கு வந்து கான்ஸ்டபிளிடம், "பாலன், வெளியில விசாரிச்சுட்டு இருக்கர நம்ம ஆளுங்கள இன்னும் ஒரு 20 அல்லது 30 நிமிஷம் கழிச்சு இங்க வரச்சொல்லுங்க, எனக்கு அவங்க என்ன கண்டு பிடிச்சிருக்காங்கன்னு தெரியனும்"

"சரி சார், நான் இப்பவே போய் சொல்லிடரேன், வெளியில காவலுக்கு 2 கான்ஸ்டபிள்ஸ்தான் இருக்காங்க போதுமா, இல்லை B3 ல இருந்து ஆளுங்கல வரவழைக்கவா?"

"இருங்கரவங்க போதும், தேவைப்பட்டா சொல்லிக்கலாம்"


"சார், சந்தானம் சார் வர்ராரரு"

"என்ன செல்வம், என்ன விஷயம்"

"வெளியில என்கொயரி பண்ணிகிட்டிருக்கர நம்ம ஆளுங்கள வந்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லிட்டு இருக்கேன், அருள் மொழி வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு போயிருக்கார், உங்கள கால் பண்ண சொல்லிட்டு போயிட்டார், துரை உங்கள உடனே கால் பண்ணச் சொன்னார். உங்களுக்கு என்ன சார் ப்ரச்சனை?"

"உங்க கிட்ட எனக்கு ப்ரச்சனைன்னு எப்ப சொன்னேன்" என்று சீறினார்.

(தொடரும்)

No comments: