Wednesday, December 26, 2007

தடயம் - அத்தியாயம் - 6

"என்ன செல்வம், என்ன விஷயம்"

"வெளியில என்கொயரி பண்ணிகிட்டிருக்கர நம்ம ஆளுங்கள வந்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லிட்டு இருக்கேன், அருள் மொழி வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு போயிருக்கார், உங்கள கால் பண்ண சொல்லிட்டு போயிட்டார், துரை உங்கள உடனே கால் பண்ணச் சொன்னார். உங்களுக்கு என்ன சார் ப்ரச்சனை?"

"உங்க கிட்ட எனக்கு ப்ரச்சனைன்னு எப்ப சொன்னேன்" என்று சீறினார்.

"இல்லை அவசரமா போன் போன் பேச வெளியில போனீங்களேன்னு கேட்டேன், சாரி சார்"

"இட்ஸ் ஓகே."

"அருள் மொழிகிட்ட பேசிடறேன்"

"அப்ப துரை சார்?"

"அவரு எங்க போயிடப்போறாரு, நீங்க மெசேஜ் சொல்லிடீங்கல்ல, இனி நான் பாத்துக்கறேன்."

"ஹலோ, அருள், நான் சந்தானம் பேசறேன், என்ன மேட்டர்,.."

"..."

"இல்லை இங்க நானும் செல்வமும்தான் இருக்கோம்"

"..."

"அப்படியா!"

"..."

"நீங்க எங்க இருக்கீங்க? வீட்லயா?"

"..."

"ஹெல்ப்புக்கு யாரையாவது அனுப்பட்டுமா? செல்வத்தை அனுப்பட்டுமா?"

"..."

"டோண்ட் வொர்ரி, நான் வரட்டுமா?"

"..."

"ஓகே, வீட்டுக்கு போய் நிலவரம் தெரிஞ்சதும் எனக்கு போன் பண்ணுங்க"

"என்ன சார் என்ன ப்ரச்சனை?"

"செல்வம், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியனும்னா, நானே சொல்றேன், இப்போதைக்கு ப்ரச்சனை ஒன்னும் இல்லை. அருளோட அஸிஸ்டெண்ட்ஸ் என்ன கண்டுபிடிச்சாங்கன்னு விசாரிங்க, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிங்க, அத விட்டுட்டு தேவையில்லாம எங்கிட்ட கேள்வி கேக்கரதெல்லாம் வேண்டாம்"

"ஹலோ, துரை, நான் சந்தானம் பேசறேன், கால் பண்ணியிருந்தீங்களாம், என்ன விஷயம்"

"நான் கால் பண்ணல, செல்வம்தான் பண்ணினார். ஆமா, என்ன கண்டு பிடிச்சீங்க, செல்வமும், அவர் ஸ்டேஷன் ஆளுங்களும், நல்லா கோ-ஆப்பரேட் பண்றாங்களா?"

"ஷூர், நல்லா கோ-ஆப்பரேட் பண்றாங்க, இங்க நடந்திருக்கரது ஒரு ப்ளாண்டு ஆப்பரேஷன், அருளை பர்சனலா வரச்சொல்லி தடயங்கள எடுக்க சொல்லியிருக்கேன். கூடிய சீக்கிரம் அவங்கள நெருங்கிடுவோம். நான் அப்பரம் கால் பண்றேன்."

"செல்வம், துரைக்கு எதுக்கு போன் பண்ணினீங்க, நான் அப்பவே சொன்னேன் நாம ரெண்டு பேரும் ஒன்னா இந்த கேஸ்ல ஒர்க் பண்ணப் போறோம்னு அப்பரம் எதுக்கு என்னை கேக்காம அவருக்கு போன் பண்ணினீங்க?"

"சார், நாம ரெண்டு பேரும் ஒன்னா ஒர்க் பண்ணலாம், ஆனா துரை என்னுடைய மேலதிகாரி, அவருக்கு நான் இங்க நடக்கரது பற்றி அடிக்கடி ரிப்போர்ட் தரனும்கரது அவருடைய ஆர்டர், அதை நான் மீற முடியாது. So இனி என்ன பண்றதுங்கரதை பத்தி யோசிப்போம்."

வாசலில் பாலன் தயங்கிய படி இருந்தார், சந்தானம் அவரை பார்த்து, "யாருயா? என்ன வேணும், சீனியர் ஆபிசர்ஸ் பேசிகிட்டு இருக்கோம், கதவைத் தட்டிட்டு உள்ள வரனும்னு தெரியாது?"

"சாரி சார், என் பேர் பாலன், செல்வம் சார் ஸ்டேஷன்ல ஏட்டா வேலை செய்யறேன். வேளியில விசாரிக்க அனுப்பின கான்ஸ்டபிள்ஸ வரச் சொன்னாரு அவங்க வந்திட்டாங்க, உள்ள வரச் சொல்லாமான்னு கேக்க வந்தேன்."

"கொஞ்சம் வெளியில இருங்க நான் வந்து பாக்கரேன்" என்ற சந்தானம், "செல்வம், என்ன நடக்குது இங்க, எதுக்கு இப்ப அவங்கள என்கொயரிய முடிச்சுட்டு வரச்சொன்னீங்க? தேவராஜ் என்ன ஆனான்னு தெரியக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?"

"சார், துரை சார்தான் இன்னும் ரெண்டு மணி நேரத்தில ஒரு ரிப்போர்ட் கேட்டாரு அதனால இவங்க என்ன கண்டு பிடிச்சாங்கங்கரத தெரிஞ்சுகிட்டா நல்லதுன்னு அவங்கள வரச்சொன்னேன்."

சந்தானம், பாலனைப் பார்த்து, "யோவ் அவங்கள உள்ள வரச்சொல்லு"


உள்ளே வந்த கந்தசாமியையும், குமரேசனையும் பார்த்து சந்தானம், "என்னய்யா! என்ன பெரிசா கண்டு பிடிச்சீங்க? சொல்லுங்க" என்றார்.
அதை கேட்ட கந்தசாமிக்கு முகம் சற்று கறுத்தது.
(தொடரும்)

No comments: